புதியவை :

Grab the widget  Tech Dreams

12 பிப்ரவரி 2010

5 பேரை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய பெண் டாக்டர் கைது






பெங்களூர் எம்.வி.நகர் 8-வது மெயின்ரோடு, 8-வது தெருவை சேர்ந்தவர் விசார் மகன் வின்சென்ட் (வயது 33). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்தார்.

அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் கண் டாக்டர் சாந்தி (44). இவர் அடிக்கடி வின்சென்டை தனது அறைக்கு அழைத்து பேசுவாராம். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் 2 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது.

இந்த சூழ்நிலையில் வின்சென்ட் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் சாந்தி தன்னை மோசடியாக செக்ஸ் வலையில் சிக்க வைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தையும் மற்றும் 26 பவுன் தங்க நகையும் பறித்து கொண்டார் என்றும், அத்துடன் தன்னை அடியாட்களை வைத்து சித்ரவதை செய்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் சாந்தியை நேற்று கைது செய்தனர்.

போலீசார் நேற்று டாக்டர் சாந்தியிடம் விசாரித்த போது அவரை பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் பிரபல டாக்டர். அவரது மகள் தான் சாந்தி. இவர் தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரியில் படித்தபோது மலேசியாவை சேர்ந்தவரும், அதே கல்லூரியில் படித்தவருமான குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளான். டாக்டர் சாந்தி திருச்சி கே.கே.நகரில் கண் மருத்துவமனை நடத்தி வந்தார். இந்நிலையில் டாக்டர் குணசேகரனுக்கும், சாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக குணசேகரன் மலேசியாவிற்கு சென்று விட்டார்.

பின்னர் திருச்சியை சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திரபோசுடன் சாந்திக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதல் 2001 முதல் 2005 வரை நீடித்தது. பின்னர் அவரையும் கழற்றிவிட்டு, தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த கும்பகோணத்தை சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்து கணவன்- மனைவியாக வாழ்ந்தார்.

அப்போது கும்பகோணம் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு எடுத்து டாக்டர் சாந்தி தங்கினார். சில நாட்களில் பாலமுருகனுக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த பிரச்சினைக்கு பிறகு பெங்களூரை சேர்ந்த ஆனி என்ற டாக்டருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில் வின்சென்ட்டை 5-வது காதலராக வலையில் சிக்கவைத்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.

கும்பகோணத்திற்கு நேற்று வந்த டாக்டர் சாந்தியின் 2-வது கணவர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், என்னுடன் டாக்டர் சாந்தி, சுமார் 5 ஆண்டுகள் பழகி என்னிடம் பணத்தை ஏமாற்றியதோடு என்னையும் போலீசில் சிக்க வைத்துவிட்டார்.

இவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்குவது தான் டாக்டர் சாந்தியின் வேலை. இவரால் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்திற்கு வந்துள்ளேன். அவரின் செக்ஸ் டார்ச்சர் வெளி உலகிற்கு தெரிந்தால் தான் அப்பாவிகளுக்கு நல்லது.

பதிவு பிடித்திருந்தால் வாக்கு அளியுங்கள் , நன்றி


1 கருத்து:

  1. ஆண் என்ன பெண் என்ன வரதட்சனைக்கொடுமை என்பது இந்த சமூகத்தின் கெளரவ முத்திரையாக மாறிவிட்டது. ஒரு பெண் மருத்துவர் இந்த செயலில் ஈடுபட்டது மருத்துவ உலகிற்கே கேடு.
    ஜி வீ ஆர்

    பதிலளிநீக்கு