புதியவை :

Grab the widget  Tech Dreams

05 பிப்ரவரி 2010

காந்தி சாராயம் காய்ச்ச வற்புறுத்தினார்! லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் .


இன்ஸ்பெக்டர் காந்தி , ஏட்டு செல்வராஜ்

துறையூர் அருகே, முன்னாள் சாராய வியாபாரியை மிரட்டி, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருச்சி, துறையூர் அருகே சிங்களாந்தபுரம் தெற்கியூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். தற்போது, அத்தொழிலை விட்டுவிட்டு, புதுச்சேரியில் போர்வெல் அமைக்கும் வேலை செய்கிறார்.

கடந்த வாரம், தன் மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்க்க துறையூர் வந்தார். அப்போது, இவரை துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு செல்வராஜ் ஆகியோர் சந்தித்து, மீண்டும் சாராயம் காய்ச்சுமாறு வற்புறுத்தியுள்ளனர்.தனக்கு சாராயம் காய்ச்ச விருப்பமில்லை என அசோக் கூறியுள்ளார். இதனால், அசோக் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்கு போடுவதாகக் கூறி, காந்தியும், செல்வராஜும் மிரட்டினர். வழக்கு போடாமலிருக்க, இருவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். 18 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட அசோக், இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

காந்தியின் பெயரை வைத்து கொண்டு இந்த அயோக்கியத்தனம் செய்யலாமா இன்ஸ்பெக்டர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக