புதியவை :

Grab the widget  Tech Dreams

04 பிப்ரவரி 2010

பால் தாக்கரே , பாகல் தாக்கரே ஆகாமல் இருக்க ரவிசங்கர் யோசனை !

பால் தாக்கரேக்கு ஸ்ரீ ரவிசங்கர் அறிவுரை !

""தாக்கரே குடும்பத்தினர் தங்களின் கோபத்தை குறைத்து அமைதி பெற, வாழும் கலை பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்,'' என, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக கூறியதாவது:ஒற்றுமையாக இருப்பதே இந்தியாவின் பலம். அற்பமான பிரச்னைகளுக்காக இந்த ஒற்றுமையை சீர் குலைக்கக் கூடாது. வார்த்தைப் போர் பிரச்னைகளை சிக்கலாக்குமே அன்றி, அவற்றை தீர்க்க உதவாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே இந்தியாவாக இருப்பதையே நாம் பார்க்க வேண்டும்.

தாக்கரே குடும்பத்தினர் தங்களின் கோபத்தை குறைத்து அமைதியாக செயல்பட வேண்டும். அதற்கு வாழும் கலை அமைப்பின் பாடங்களை, பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக