புதியவை :

Grab the widget  Tech Dreams

04 பிப்ரவரி 2010

இந்தி கற்று கொடுப்பதற்கு 5,000 ரூபாய் லஞ்சம்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பி.எஸ்.என்.எல்., உதவி பொதுமேலாளர் ராஜேந்திரன்.

நாகபட்டினம் சத்தியப்பா திருக்குலமுடக்கை சேர்ந்தவர் இந்தி ஆசிரியர் ராமசாமி.

காரைக்கால், நாகபட்டினம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு இந்தி கற்று கொடுப்பதற்கு, அனுமதி வழங்க ராமசாமியிடம், ராஜேந்திரன் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, சி.பி.ஐ.,யிடம் புகார் கூறினார்.நேற்று முன்தினம் ராமசாமியிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, ராஜேந்திரனை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதனிடம் நேற்று காலை ஆஜர்படுத்தினர். ராஜேந்திரனை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக