புதியவை :

Grab the widget  Tech Dreams

16 ஆகஸ்ட் 2010

ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : நிலத்தை பிரித்து தனிப்பட்டா கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டையில் வசிப்பவர் பிலிப் பெர்க்மான்ஸ்(60). அரசு போக்குவரத்து நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பெயரில் பாளை.,கிருஷ்ணாபுரத்தில் உள்ள 20 சென்ட் நிலத்தை மகன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்தார். அதற்காக தனிப்பட்டா கோரி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தார். அந்த பணியினை மேற்கொள்ளவேண்டிய தலைமை சர்வேயர் வின்சென்ட்(57), சிவந்திப்பட்டி பிர்கா சர்வேயர் சிக்கந்தர் முகைதீன்(56) ஆகியோர் 3 மாதங்களாக வேலையை முடிக்காமல் இழுத்தடித்தனர். பிலிப் கேட்டபோது 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் காரியம் நடக்கும் என்றார்கள். லஞ்சம் தர விரும்பாத பிலிப், நெல்லை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., மனோகரகுமாரிடம் புகார் செய்தார். இன்று மாலையில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்தபோது பிலிப் கொடுத்த பணத்தை வாங்கிய சர்வேயர்கள் இருவரையும் டி.எஸ்.பி.,தலைமையிலான போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

பட்டா மாற்ற ரூ.4 ஆயிரம் லஞ்சம் :திண்டிவனத்தில் வி.ஏ.ஓ., கைது

திண்டிவனம் :பட்டா மாற்றம் செய்ய, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கிருஷ்ணன்(31). இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், நிலம் விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தின் பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ.,விடம் மனு செய்தார்.பெரியதச்சூர்(வடக்கு) வி.ஏ.ஓ., திருவேங்கடம் பட்டா மாற்றம் செய்வதற்கு 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின்னர் 4,000 ரூபாய் தர வேண்டுமென கூறியுள்ளார்.இது குறித்து கிருஷ்ணன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணம் 4,000 ரூபாயையும் கிருஷ்ணன் மாலை 6.45 மணிக்கு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திலிருந்த வி.ஏ.ஓ., திருவேங்கடத்திடம் கொடுத்தார்.அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ஏட்டுகள் ஜீவா, பாலு, அஷ்டமூர்த்தி, சுரேஷ், முருகானந்தம் உள்ளிட்ட குழுவினர் திருவேங்கடத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட திருவேங்கடம், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆகஸ்ட் 2010

கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்

சேலம்: சேலத்தில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, எஸ்.பி.,யிடம் கண்ணீர் புகார் அளித்தார்.ஆத்தூர் இலந்தவாரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். அவர் நேற்று சேலம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.அதில், என் மகள் மகாலட்சுமி (17). அவரை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளி மகன் ராஜா ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று கற்பழித்தார். எனது மகள் கடத்தப்பட்டதை அறிந்த நான், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக மகாலட்சுமியை ஆகஸ்ட் 6ம் தேதி ராஜா வீட்டில் இருந்து மீட்டு வந்தேன். எனது மகள் கற்பழிக்கப்பட்டதை அறிந்த நானும், எனது உறவினர்களும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தலைவாசல் போலீஸில் புகார் அளிக்க சென்றேன். புகார் மனுவை பதிவு செய்யவும், விசாரிக்கவும் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி கேட்டனர்.


ராஜாவின் நண்பனான ஆதியின் உறவினர் தலைவாசல் போலீஸ் ஏட்டு என்பதால், அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏட்டுவும், இன்ஸ்பெக்டரும் தற்போது அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். என் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அவர்களை விட லஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று எங்களை வற்புறுத்துகின்றனர். எனது மகளை சீரழித்த ராஜா மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கும் இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன், ஏட்டு ராமசாமி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.



07 ஆகஸ்ட் 2010

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள் 500 பேர்! போட்டோக்களை வெளியிட அரசு முடிவு


தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்தி வரும் அதிரடி வேட்டையில், 500க்கும் மேற்பட்ட லஞ்ச அதிகாரிகள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளனர்.


லஞ்ச அதிகாரிகளை பொறி வைத்து பிடிப்பதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் தகவல்களை, புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்' என, அனைத்து அரசு அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால், லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வேலையை முடிக்க இவ்வளவு பணம் என்று அறிவிப்பு பட்டியல் வைக்காத குறையாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் சாதாரண உதவியாளர் முதல் தலைமையிட உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்காதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது.


இந்நிலையில், அரசு அலுவலகங்களில் தலை தூக்கியுள்ள லஞ்ச, லாவண்யங்களை ஒடுக்க தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. இது தொடர்பான அரசின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக களமிறங்கினர். இதன் பயனாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், இதுவரை லஞ்சத்தில் புரண்டு வந்த சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.


கடந்த 2007-08ம் ஆண்டில் 127 பேர், 2006-07ம் ஆண்டில் 131 பேர், 2005-06ம் ஆண்டில் 136 பேர் என சராசரியாக 100 முதல் 150 பேர் வரை போலீஸ் பிடியில் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு புகார்களின் அடிப்படையில், 312 வழக்குகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறும் போது, போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிகம். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் லஞ்ச வழக்கில் சிக்கும் அதிகாரிகளின் தகவல்களை புகைப்படத்துடன், இணையதளத்தில் வெளியிட தற்போது அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 5,186 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,527 வழக்குகளில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் போது, கையும், களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தவிர 1,028 வழக்குகள் ஆரம்ப நிலையிலும், 1,739 வழக்குகள் விரிவான விசாரணையிலும், 892 வழக்குகள் ரெகுலராகவும் நடந்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு மார்ச் வரை எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கோர்ட் நிலுவையில் இருந்த 877 லஞ்ச வழக்குகளில், 1,866 அரசு அலுவலர்களிடமும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்த 385 வழக்குகளில், 1,182 பேரிடமும், துறை ரீதியாக நிலுவையில் உள்ள 4,662 வழக்குகளில், 3,546 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதும் விசாரணை அளவிலேயே உள்ளன.


தண்டனை நிச்சயம் :லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்குவார்களே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், லஞ்ச அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தமிழகம் முழுவதும், 2008-09 ஆண்டில், பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வரும் பல்வேறு லஞ்ச வழக்குகளில் 40 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 62 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

06 ஆகஸ்ட் 2010

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப் பதிவு செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியைச் சேர்ந்தவர் அன்பழகன்(45). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் வீட்டுமனை வாங்கியுள்ளார். பத்திரப் பதிவு செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளராக உள்ள தர்மபுரியைச் சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை சந்தித்தார். அவர், இடத்தின் மதிப்பை அதிகமாகக் கூறிவிட்டு குறைந்த மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து தர ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பழகனிடம் கொடுத்து சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அனுப்பினர். அவர், பணத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு சார்பதிவாளர் சுரேசை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த மூன்று வருடங்களில் ஐந்து முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர். நடப்பான்டில் இது வரை இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகப்படுத்தி கூறுகின்றனர். பின், குறைத்து பத்திரப்பதிவு செய்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு அரசு வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றனர். விவரம் புரியாமல் மக்களும் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.

லஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூவர் "சஸ்பெண்ட்'

எழுமலை: மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கள்ளக்காதலியை தாக்கிய ஏட்டு, மது போதையில் சாலையில் உருண்டு கிடந்த ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன். வழக்கு ஒன்றில் சிலரை கைது செய்யாமல் இருக்க, லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். கோர்ட் உத்தரவுப்படி, எஸ்.ஐ., ரிமாண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பக்கபலமாக இருந்து லஞ்சம் வசூலித்து கொடுத்த ஏட்டு சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


மேலூர் ஏட்டு பாலசுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் பணியின் போது, பட்டப்பகலில் மது போதையில் சாலையில் உருண்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தனர். அவரை அப்புறப்படுத்திய போலீசார், ஏட்டு போதையில் இருந்தது குறித்து எஸ்.பி., மனோகருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

சாப்டூர் ஏட்டு ரவி. இவர், கள்ளக்காதலியை அடித்து, உதைத்தாக வரப்பட்ட புகார் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.ஐ., சீனிவாசன், ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக எஸ்.பி., மனோகர் விசாரணை நடத்தினார். அவரது பரிந்துரைப்படி, சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ரவி, சின்னசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், பணிக்கு சரியாக வராத ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சுப்பிரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் உத்தரவிட்டார்

ரூ.2,000 லஞ்சம்: டாஸ்மாக் அதிகாரிகள் இருவர் கைது

விருதுநகர்: விருதுநகரில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருந்த ராமகிருஷ்ணன். பீர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வாங்கியது தொடர்பாக, இவரை மாவட்ட மேலாளர் செம்புக்குட்டி சஸ்பெண்ட் செய்தார். மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி, விருதுநகரிலுள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு நேற்று மதியம் ராமகிருஷ்ணன் வந்தார். அவரை அணுகிய உதவி மேலாளர் செல்வம்(54), 2,000 ரூபாய் கேட்டார். இது குறித்து ராமகிருஷ்ணன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.


போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த 2,000 ரூபாயை நேற்று மாலை 6 மணியளவில் டாஸ்மாக் அலுவலகத்திலிருந்த செல்வத்திடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்காமல், அங்கு வேலைபார்க்கும் சிவகாசி பார் மேற்பார்வையாளர் ஜெகநாதனிடம்(39) கொடுக்கச் சொன்னார். ராமகிருஷ்ணனும், ஜெகநாதன் இருந்த அறைக்குச் சென்று அவரிடம் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் பணத்தைக் கைப்பற்றினர். உதவி மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெகநாதன் இருவரையும் கைது செய்தனர்.

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகராட்சி சுகாதார அதிகாரி கைது.


திருவாரூர்: தனியார் துப்புரவுப் பணி கான்ட்ராக்டரிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவாரூர் நகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானைச் சேர்ந்தவர் மயில்வாகனன்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக எழுத்தர். அரசு பணியில் இருக்கும் இவர், கிடாரங்கொண்டான் கவுன்சிலராகவும் இருந்தார். நகர மன்றத்தில் எதிர்ப்பு வலுத்ததால், கடந்த இரு மாதங்களுக்கு முன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் கவுன்சிலராக இருந்த போது, நகராட்சி பகுதியில் துப்புரவுப் பணியை ஸ்ரீ மாதா டெவலப்மென்ட் சோஷியல் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று செய்து வந்தார்.


திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், திருவாரூர் நகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், திருநெல்வேலியில் இருந்து திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே பிரிவில் சுகாதார ஆய்வாளராக திண்டுக்கல் பழனிச்சாமி இருந்தார். இவர், சென்னைக்கு கடந்த மாதம் இடமாறுதல் செய்யப்பட்டார். இருவரும், துப்புரவுப் பணியாளர் மாத சம்பளம் செக் வழங்க, ஒவ்வொரு மாதமும், தனியார் துப்புரவு நிறுவனத்திடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கினர். இதை முன்னாள் கவுன்சிலரும், நுகர்பொருள் வாணிபக் கழக எழுத்தருமான மயில்வாகனன், நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார்.


அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், திருவாரூர் நகராட்சியை கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த சுகாதார அதிகாரி ராஜாவிடம், துப்புரவு தனியார் நிறுவன கான்ட்ராக்டர் மயில்வாகனன், பழனிச்சாமிக்கு சேரவேண்டிய ரூபாயும் சேர்த்து 3,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை ராஜா வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராஜாவிடம் இருந்த பணத்தை சோதனை செய்த போது, அதில் ரசாயன பவுடர் தடவியதும், ராஜா கைரேகையும் பதிவாகியிருந்தது. மயில்வாகனன் கொடுத்த புகாரின் பேரில், நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், திருவாரூர் நகராட்சி சுகாதார அதிகாரி ராஜா 2,000 ரூபாய், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து, திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ், லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நிலக்கோட்டை பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தர் கைது.


நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாலைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(35). இவர், நிலக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக வாங்கிய நிலத்திற்கு பத்திரம் பதிவு செய்தார். ஒரு வாரத்திற்குப் பின், பதிவு செய்த பத்திரத்தை திருப்பித் தருமாறு தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம்(48) கேட்டார். அவர், பத்திரத்தை தருவதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டார். ராமமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று ராமமூர்த்தி, தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்.

வரதட்சணை கேட்பது குற்றமல்ல - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு .


புதுடெல்லி, ஆக. 6

வரதட்சணை கேட்பது குற்றமல்ல என்றும் அது கிடைக்காதபட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினால் மட்டுமே குற்றமாகும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவரது மனைவி பெயர் சந்தோஷ். இவர் கடந்த 93ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அமர்சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் குற்றவாளிகள் என கீழ் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 3 பேரும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் வழக்கை விசாரித்த ஐகோர்ட், அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரரை விடுதலை செய்தது. அமர்சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

அமர்சிங்கின் தாயார் மற்றும் சகோதரர் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமர்சிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுவில், ‘மனைவி வீட்டாரிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு கேட்டது உண்மைதான். அவர்கள் வாங்கித் தரவில்லை. அதற்காக என் மனைவியை நான் எந்தவகையிலும் வற்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ இல்லை’ என்று அமர்சிங் கூறியிருந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர், “அமர்சிங் ஸ்கூட்டர் கேட்ட விஷயம் இரண்டு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக அவர் மனைவியை கொடுமைப்படுத்தினார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால்தான் குற்றமாகும். இந்த கொடுமையின் காரணமாக மனைவி இறந்தால் அது தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதனால், அமர்சிங்கை விடுதலை செய்கிறோம்” என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என வரதட்சணை எதிர்ப்பாளர்கள் பிரசாரம் செய்து வரும் வேளையில் வெறுமனே வரதட்சணை கேட்பது குற்றமாகாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


05 ஆகஸ்ட் 2010

ஊழலை காட்டிக் கொடுப்பவரை காப்பாற்ற மத்திய அரசு புது சட்டம்

கொலை செய்யப்பட்டதேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யேந்திர துபே


புதுடெல்லி, ஆக. 5


மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்கிறது.
அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதுண்டு. சில சமயம் ஊழல் புரிந்தவர்களின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதும் உண்டு. இதனால் ஊழல் நடப்பது தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்த யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில் ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை காப்பாற்ற மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று டெல்லியில் கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.


இந்த புதிய சட்டப்படி ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. காட்டிக் கொடுத்தவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் காட்டிக் கொடுத்தவர் பற்றிய விவரத்தை வெளியில் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது இந்தச் சட்டப்படி நடவடிக்கை பாயும். அதே சமயம் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்க நினைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் இடமுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நடப்பு கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


சில ஆண்டுகளுக்கு முன் தங்க நாற்கர சாலை திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறிய தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யேந்திர துபே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சட்ட கமிஷனும் பரிந்துரை செய்ததை தொடர்ந்து இந்த மசோதா உருவாக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.





கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஆணையம் கவனம் கொண்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின் இணைப்பு பெற முடிவு செய்யும்போது, மேம்பாட்டுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வாடகைதாரர் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்கள் சுமையைக் குறைக்கவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறி, வீட்டின் உரிமையாளர்கள் சிலர், வாடகைதாரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு இருந்தால், அதிக பட்சமாக யூனிட்டுக்கு 4.05 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். பயன்பாடு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால், அளவீட்டைப் பொருத்து ஒரு யூனிட்டுக்கு 2.20, 1.50 ரூபாயும், 80, 70 பைசா மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோத செயல். விதிமுறை மீறி கட்டணம் வசூலித்தால், 2003ம் ஆண்டு, மின்சாரத் சட்டம் 142, 146 பிரிவுகளின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கத்தக்க குற்றம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், கோர்ட்டில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

04 ஆகஸ்ட் 2010

ராணுவ வீரரிடம் 10 ஆயிரம் லஞ்சம் , எஸ்ஐ கைது.


தேசத்திற்காக பாடு பட்ட ஒரு அப்பாவி முன்னாள்ராணுவ வீரனின் உடையை களைய சொன்ன எஸ்ஐ



ஆவடி, ஆக 4


‘கடுமையான பிரிவுகளில் வழக்கு போடாமல் இருக்க, பத்தாயிரம் தர வேண்டும்’ என்று கூறி, மாஜி ராணுவ வீரரிடம் பணம் பறித்த திருமுல்லைவாயல் எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.


திருமுல்லைவாயல் தந்தை பெரியார்நகர் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஐசிஎப்பில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றுகிறார். இவரது மனைவி தாமஸ்மேரி (48).

இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதி வடிவேலு, சத்யா.


கடந்த 28&ம்தேதி அப்பகுதியில் மழை பெய்தது. துரைசாமி வீட்டு மாடியில் தேங்கிய தண்ணீரை திறந்துவிட்டபோது அது தெருவில் வழிந்தோடி வந்து வடிவேலு வீட்டருகே தேங்கியதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக, தாமஸ்மேரிக்கும் சத்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி வடிவேலு, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, துரைசாமியை அழைத்து விசாரணை நடத்திய சப் இன்ஸ்பெக்டர் ஸ்டா ன்லி ஜோன்ஸ் ஏகத்துக்கும் பேசியிருக்கிறார். ‘எக்ஸ் மிலிட்டரின்னா பக்கத்து வீட்டுக்காரன்ட்ட வம்பிழுப்பீ ங்களா? லோக்கல் போலீஸ் பவர பத்தி தெரிஞ்சுக்கணுமா? கன்னாபின்னானு கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என்று கடுமையாக விசாரித்திருக்கிறார். பின்னர், ‘சரி.. சரி.. மிலிட்டரிகாரன மதிக்கணும்னு பாக்கிறேன். இனிமே, மழைத் தண்ணிய வடிவேலு வீட்டுப் பக்கம் போகாம பாத்துக்கங்க.. நான் அவங்கள சமாளிச்சுக்கறேன். பெட்டி கேஸ் போட்டு விட்டுர்றேன். பத்தாயிரம் ரெடி பண்ணிட்டு வாங்க..’ என்கிறரீதியில் விசாரணையை முடித்திருக்கிறார். இதையடுத்து, தகாத வார்த்தையால் பேசியதாக துரைசாமி மீது லேசான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 10ஆயிரம் ரூபாயை இரண்டு நாட்களில் தந்து விடுமாறு துரைசாமியிடம் எஸ்ஐ சொல்லி அனுப்பியிருக்கிறார்.


லஞ்ச ஒழிப்புதுறை ஐ.ஜி. துக்கையாண்டியின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை துரைசாமி கொண்டு சென்றார். ஐ.ஜி. உத்தரவின்பேரில் டிஎஸ்பி பொன்னுசாமி வழக்கு பற்றி துரைசாமியிடம் புகாரைப் பெற்று விசாரித்தார். அதிகாரிகள் கொடுத்த ஐடியாபடி, துரைசாமி ரூ.10 ஆயிரத்துடன் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வந்தார். இரவு ரோந்து பணிக்கு செல்லத் தயாராக இருந்த சப்&இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸிடம், ‘சார், நீங்க கேட்ட பணத்த கொண்டு வந்துருக்கேன்’ என்றார்.


‘ஸ்டேஷனுக்கு வெளியில என்னோட பைக் நிக்குது. பைக் கவர்ல பணத்த வச்சுட்டுப் போய்டுங்க..’ என்று எஸ்.ஐ. கூறியிருக்கிறார். எஸ்.ஐ. சொன்னது போலவே, பணத்தை வைத்துவிட்டு நகர்ந்தார் துரைசாமி. சிறிதுநேரத்திலேயே அங்கு வந்த எஸ்ஐ, பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் திணித்தார். அப்போது பாய்ந்துவந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், எஸ்ஐயை மடக்கிப் பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.


திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று காலையில் எஸ்ஐ&யை ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


முன்னாள் ராணுவ வீரர் கண்ணீர் :

சாலையில் மழைத் தண்ணீர் ஓடுவது தொடர்பாக என்னுடைய மனைவிக்கும் வடிவேலு மனைவி சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வடிவேலு புகார் கொடுத்தார். கடந்த 28ம்தேதி மாலை 5 மணிக்கு திருமுல்லைவாயல் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். நானும் போனேன். சுமார் 4 மணி நேரம் காக்க வைத்தனர். இரவு 9.30 மணிக்கு பிறகு எஸ்.ஐ. விசாரித்தார்.

வீட்டுப் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன தகராறு. பேசி தீர்த்துக் கொள்ளலாம். நான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று சொல்லிப் பார்த்தேன். நான் சொன்ன எதையும் எஸ்ஐ காதில் வாங்கவே இல்லை. ‘முதல்ல சட்டை, பேன்ட்டை கழற்றிட்டு அப்படி உட்கார்..’ என்று மிகவும் உதாசீனப்படுத்தினார். ராணுவத்தில் பணியாற்றிய என்னை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று கூறியதோடு, டிரஸ்சையெல்லாம் கழற்ற முடியாது என்று மறுத்து விட்டேன். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால், கேஸ் போடுவேன். ஐசிஎப்ல வேலை பார்க்க விட மாட்டேன் என்று எஸ்ஐ மிரட்டினார். உனக்கு வாரிசு இல்லாமல் செய்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தினார். பின்னர் 11 மணிக்கு மேல் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

மறுநாள் காலையிலும் ஸ்டேஷனுக்கு வர வைத்தார்கள். ‘உன்ன பத்தி விசாரிச்சுட்டேன்.. பென்ஷன் வருது.. ஐசிஎப்லயும் நல்ல சம்பளம்.. பிரச்னை இல்லாம கேச முடிச்சுக்கணும்னா, 10 ஆயிரம் ரூபாய் குடு. லேசா கேஸ் போட்டு வெளில விட்டுர்றேன்’ என்றார்.

இரண்டு நாள் கடும் மன உளைச்சலில் இருந்தேன். பணம் கேட்டதைக் கூட பெரிதாக நினைக்கவில்லை. ஸ்டேஷனில் வைத்து அந்த எஸ்.ஐ. என்னை நடத்திய விதத்தால் பெரிதும் அவமானப்பட்டு விட்டேன். அதனால்தான் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் கொடுத்தேன். இவ்வாறு துரைசாமி கூறினார்.


03 ஆகஸ்ட் 2010

1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது


திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.


இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.


லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.



02 ஆகஸ்ட் 2010

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் மூவர் கைது


ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உட்பட, மூன்று அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயமணி; எலக்ட்ரிஷியன். இவர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். சமீபத்தில் செம்பரம்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் ஒயரிங் வேலை செய்தார். தொழிற்சாலை நிர்வாகம், கூடுதல் மின்சப்ளை தேவை என, செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் மனு கொடுத்தது. அவர், ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு மனுவை பரிந்துரை செய்தார். தொழிற்சாலை நிர்வாகிகள், பரிந்துரை கடிதத்தை ஜெயமணியிடம் கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் உதவி செயற்பொறியாளரிடமிருந்து சாத்திய அறிக்கை(தொழிற்சாலைக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என அளிக்கப்படும் சான்று) பெறும்படி அனுப்பினர்.


ஜெயமணி கடந்த 30ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உதவி செயற்பொறியாளராகப் பணிபுரியும் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி(44) என்பவரை சந்தித்தார். தொழிற்சாலைக்கு சாத்திய அறிக்கை தரும்படி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அளித்த பரிந்துரை மனுவை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட வெங்கடாஜலபதி, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சாத்திய அறிக்கை தருவதாகக் கூறினார். பணம் தர விரும்பாத ஜெயமணி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கங்காதரன், சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். பின், ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெயமணியிடம் கொடுத்து மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினர். அதை ஏற்று பணத்துடன் நேற்று காலை 11 மணிக்கு ஜெயமணி, பென்னலூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உதவி செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, செம்பரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும் திருநின்றவூரைச் சேர்ந்த அருணாசலம்(50) மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரியும் திருவள்ளூரைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோர் இருந்தனர். ஜெயமணி தன்னிடம் போலீசார் கொடுத்த பணத்தை வெங்கடாஜலபதியிடம் வழங்கினார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டார். அந்தப் பணத்தில் அருணாசலத்திற்கு 5,000, பெருமாளுக்கு 1,000 ரூபாய் வழங்கினார். அவர்களும் பெற்றுக் கொண்டனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். ஒரே நேரத்தில் லஞ்சம் வாங்கிய மூன்று மின்வாரிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மின் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 ஜூலை 2010

ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எல்.ஏ. சிக்கினார்


இந்தூர், ஆக.1:
பொறியியல் கல்லூரி தொடங்க உதவி செய்வதாக கூறி மத்திய பிரதேச பா.ஜ. எம்.எல்.ஏ.

ரூ 10ஆயிரம் லஞ்சம் வாங்குவது கேமராவில் ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜ.வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி செய்கிறது. இங்கு, சிவபுரி மாவட்டத்தில் உள்ள கரிரா சட்டப்பேரவை தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ.வாக ரமேஷ் கத்திக் இருக்கிறார். சொராபுதீன் போலி என்கவுன்டர் பிரச்னையால் குஜராத்தில் பா.ஜ.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கத்திக் மூலமாக புதிய தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜீத். கரிரா தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்குவதற்காக 6 மாதங்களுக்கு மேல் அலைந்து பார்த்தார். எங்கும் காரியம் நடக்காததால், கடைசியாக ரமேஷ் கத்திக்கின் உதவியை நாடினார். கல்லூரி தொடங்க அனுமதி கொடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்குவது, கல்லூரி கட்ட அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்வதற்காக அஜீத்திடம் கத்திக்
ரூ 5லட்சம் லஞ்சம் கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட அஜீத், முதல் கட்டமாக
ரூ 10ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதை கத்திக் வாங்குவதையும், அந்த நேரத்தில் அவருடன் பேசிய விவரங்களையும் அஜீத் தந்திரமாக வீடியோ கேமராவில் படம் பிடித்துள்ளார். கத்திக் & அஜீத் இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:

கத்திக்:
எத்தனை பேர் சேர்ந்து கல்லூரி தொடங்க உள்ளீர்கள்?
அஜீத் :
8 பேர் சார்...
கத்திக் :
சரி, கல்லூரிக்கு தேவையான அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது மற்றும் உங்களுக்கு அவவப்போது தேவைப்படும் உதவிகளை செய்து தருகிறேன்.
அஜீத் :
ஓகே சார்... பரிந்துரை கடிதத்தை எப்போது தருகிறீர்கள்?
கத்திக் :
அதற்கு ஏற்பாடு செய்கிறேன். தேவைப்படும் போது எல்லாம் பணம் கொடுங்கள். மற்ற காரியங்களை நான் செய்து தருகிறேன். உங்களுக்கு எங்கு நிலம் வேண்டும்?
அஜீத் :
நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதைக்கு அருகே அல்லது அரை கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் வேண்டும்.
கத்திக் :
நீங்கள் வாங்கும் இடத்துக்கு அருகே அரசு நிலம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நிலத்தை உங்களுக்கு ஒதுக்கித் தர ஏற்பாடு செய்கிறேன்.
இவ்வாறு உரையாடல் நடக்கிறது.

காட்சி வெளியானதில் இருந்து, பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் கத்திக் தப்பி வருகிறார். இது பற்றி மத்திய பிரதேச சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா அளித்த பேட்டியில், “பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட சி.டி.யை கேட்டுள்ளோம். அது உண்மையானது தானா என்று ஆராய்ந்து முடிவு செய்த பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி லோக் ஆயுக்தாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நிலையில் பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் லஞ்சம் வாங்கி சிக்கி இருப்பது பா.ஜ.வுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரகசிய வீடியோ வெளியானது



நெல்லையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது


திருநெல்வேலி : லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் ஸ்ரீதர்(53). இவர் ஏர்வாடியை சேர்ந்த முத்துராஜ் என்பவரை சந்தித்து, உங்கள் மீது மும்பையில் ஒரு வழக்கு உள்ளது, அது தொடர்பாக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராஜ் அளித்தபுகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி, அசோக் கார்க் உத்தரவின் பேரில் எஸ்.ஐ., ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரதத்து வருகின்றனர்


தமிழ் நாட்டில் மின் கட்டண உயர்வு, முழு விபரம் .


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எங்களிடம் மனு செய்திருந்தது. அந்த மனு மீது ஆய்வுகள் நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட கட்டண உயர்வு பற்றிய கருத்துக் கேட்புக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். தென்னக ரெயில்வே, எரிசக்தித்துறை, நிதி, தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள், மின்வாரியத்தலைவர் ஆகியோரிடமும் கலந்து பேசப்பட்டது.
அதன் பேரில் மின் கட்டணத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்கள், குடிசைவாசிகள், விசைத்தறி, கைத்தறியாளர்கள், பொது வழிபாட்டு தலங்கள், விவசாயம் செய்வோருக்கு தற்போதுள்ள கட்டணமே இருக்கும். அவர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.


இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தொழில் மின் நுகர்வோரில் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் தாழ்வழத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடிசை தொழில் மற்றும் குறுந்தொழில் முன்நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு மின்கட்டண உயர்வு இல்லை.


வணிக மின் நுகர்வோரின் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மின்நுகர்வோரில் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 50 காசுகள் செலுத்த வேண்டும்
.


உயர் அழுத்த வகை சினிமா தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ் வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது.


இரண்டு மாதத்துக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் (தாழ்வழுத்த வகை) வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. இரண்டு மாதத்துக்கு 100 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் சிறுகடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த கட்டண மாற்றம் நாளை (ஆகஸ்டு 1) முதல் அமலுக்கு வருகிறது
.

இந்த விலை மாற்றம் காரணமாக மின்வாரியத்துக்கு 1651 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.


நடப்பாண்டில் 6450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100 சதவீத பற்றாக்குறையில் 20 சதவீத அளவுக்குதான் கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது.


600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 299 பேர் உள்ளனர்.


600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 1 கோடியே 53 லட்சம் பேருக்கு கட்டண உயர்வு இல்லை.


3 சதவீத மக்கள்தான் கூடுதல் மின்கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த கட்டண திருத்தம் 2013-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.


தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 75 காசு முதல் ஒரு ரூபாய் 70 காசு வரை அரசு மானியமாக கொடுக்கிறது. இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 10 காசு முதல் ஒரு ரூபாய் 30 காசு வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 40 காசும் விவசாயிகளுக்கு குதிரை சக்தி ஒன்றுக்கு 250 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.


நடப்பாண்டுக்கான அரசின் மொத்த மானியத் தொகை ரூ.1652 கோடியாகும்.


கடைசியாக 2003-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



29 ஜூலை 2010

லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்


பதிவு செய்த "வீடியோ'வை காணhttp://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32




திருப்பூர் : திருப்பூரில் லஞ்சப்புகார் சுமத்தப் பட்ட, பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி பிறப்பித்துள்ளார்.

உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி. இவர், திருப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த 23ம் தேதி மதியம், கரட்டாங்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

அதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட ஆறு பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், லஞ்சம் பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் வெளியானது. அதில், எலக்ட் ரிக்கல் கடைக்கு வந்த இந்திராணி, சுப்ரமணியத்துடன் பேசும் உரையாடல் இடம்பெற்றிருந்தது. மன்னிப்பு கேட்பது, கண்ணீர் சிந்தி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, லஞ்சப்புகார் இன்ஸ்பெக்டர் இந்திராணியை சஸ்பெண்ட் செய்து, கோவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்றிரவு உத்தரவிட்டார்.

லஞ்சம் வாங்கிய சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது


எழுமலை : இடமாறுதலுக்காக ஆசிரியையிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாவட்டம் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓணாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் சங்கீதா. இந்த பள்ளியில் பணிபுரிந்து 2 ஆண்டுகள் முடிந்ததால், பொது மாறுதலில் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கடந்த ஏப்ரலில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்நிலையில் வீராளம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் கபிலன், ஓணாப்பட்டிக்கு மாற்றக் கோரினார். இந்த இரு ஆசிரியர்களும் மனமொத்த மாறுதலுக்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை அணுகினர். அவர் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை அணுகுமாறு கூறினார்.


சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகானந்தம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து, மாறுதல் செய்யுமாறு சங்கீதா கேட்டார். இதற்கு முத்துகிருஷ்ணன் 2000 ரூபாய் கொடுத்தால் மனமொத்த மாறுதல் செய்கிறோம் என்று சங்கீதாவிடம் கூறினார்.


இதையடுத்து சங்கீதா மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கூறியபடி ரசாயனம் தடவிய 2000 ரூபாயை எடுத்துக் கொண்டுசங்கீதா சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் முத்துகிருஷ்ணன் இல்லை. சங்கீதா முத்துகிருஷ்ணனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, ""அங்கு முருகானந்தம் இருப்பார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள்'' எனக் கூறியுள்ளார். முருகானந்தத்திடம் சங்கீதா பணத்தை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக முருகானந்தத்தை கைது செய்தனர்.



பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா? வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

வீடியோவில் இன்ஸ்பெக்டர் இந்திராணி இடம்பெற்ற காட்சி http://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32


திருப்பூர்:
இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்ட சம்பவத்தில், பேனா காமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இந்திராணி. கடந்த சில மாதங்களாக திருப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பணியையும் கவனித்து வந்தார்.


திருப்பூர் காப்பகத்தில் குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக இவர் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி பிரபாவதியின் தரப்பில் திருப்பூர், கரட்டாங்காட்டை சேர்ந்த சரவணன் (33) என்பவர் ஆஜராகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சரவணனுக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடைக்கு இன்ஸ்பெக்டர் இந்தி ராணி சென்றுள்ளார்.
அங்கு சரவணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்ததை வீடியோ சுப்பிரமணியம் என்பவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.


தொடர்ந்து வீடியோவில் பதிவு செய்துள்ளதை காட்டி, இன்ஸ்பெக்டர் இந்திராணியை வீடியோ சுப்பிரமணியம் (50), முருகேசன் (32), சையத் ஆதில் (38), சண்முகம் (32), மணி (40) மற்றும் சரவணன் (33) ஆகியோர் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டரை அவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இது தொடர்பாக அப்பகுதியினர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வீடியோ சுப்பிரமணியம் உட்பட 7 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர். இது தொடர்பாக இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக சுப்பிரமணியம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்பிரமணியம் வீட்டில் போலீசார் ரெய்டும் நடத்தினர்.


இந்நிலையில், அன்று பதிவான வீடியோ காட்சிகளின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது. பேனா காமி ராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள் சுமார் 5 நிமிடம் வரை ஓடுகிறது. வீடியோ காட்சிகளில் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.


இருப்பினும் தனியார் காப்பக நிர்வாகி பிரபாவதி கைது செய்யப்பட்ட வழக்கில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் போலீசாரிடமும் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண் கூறுகையில், “வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தன்னை மிரட்டுவதாக இன்ஸ்பெக்டர் போலீசில் புகார் அளித்தார். அதனை உறுதி செய்யும் வகையில் அந்த வீடியோ காட்சிகள் உள்ளன. அதில் உள்ள ஆடியோ உண்மையானது தானா என்பது தொடர் பாக விசாரணை நடந்து வருகிறது. உண் மையான ஆடியோவா அல்லது எடிட்டிங் செய்யப்பட் டதா என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். லஞ்சம் வாங்குபவரை மிர ட்டி லஞ்சம் வாங்கினால் அது சரியாகி விடாது. மிரட் டிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உண்மை என நிரூபணம் ஆனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,“ என்றார்.



தாமதமாய் வெளியானது ஏன்?


கடந்த 23ம் தேதி நடந்த சம்பவ காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ காட்சிகள், 5 நாட்களுக்கு பின்னர் நேற்று வெளியாகியுள்ளது. 5 நாட்கள் தாமதமாக வெளியிடப்பட்டது ஏன் என்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வீடியோ சுப்பிரமணியத்தின் தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டவை என்றும், வீடியோவில் ஆடியோவை அவர்களுக்கு ஆதரவாக எடிட்டிங் செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த வீடியோ காட்சிகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சத்துணவு அமைப்பாளரிடம் லஞ்சம் தணிக்கை அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை


திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர். 1996&97&ம் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 1999&ம் ஆண்டு பிப்ரவரியில் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்றார்.
அவர் கொண்டு வந்த கணக்குகளை வேலூர் மண்டல துணை இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை ஆய்வாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
அப்போது, ‘தகவல் சரியாக இல்லை. உன் சம்பளத்தில் பிடித்தம் (ரெக்கவரி) செய்யப்படும்.
ரூ.2ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

ரூ
500கொடுக்க பன்னீர்செல்வம் சம்மதித்து கணக்கை இறுதி செய்துவிட்டு சென்றார். ஆனால், பணத்தை பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ஆறுமுகம் மூன்று முறை கடிதம் அனுப்பியும் பன்னீர்செல்வம் கண்டுகொள்ளவில்லை.

பின்னர், ‘பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்று மிரட்டி கடிதம் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின்படி, பன்னீர்செல்வம் கொடுத்த பணத்தை வாங்கியபோது ஆறுமுகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி முரளிசுந்தரம் நேற்று தீர்ப்பு கூறினார்.

கடிதம் அனுப்பி லஞ்சம் வாங்கிய ஆறுமுகத்துக்கு 37 மாதம் கடுங்காவல் தண்டனையும்,
ரூ 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

10ஆயிரத்தை ஆறுமுகம் உடனே செலுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் பறிப்பு .வனச்சரகர் உட்பட 4 பேர் கைது






மண்ணுளி பாம்பை தாங்களாகவே காரில் போட்டு, கேரள ரியல் எஸ்டேட் அதிபர்களை சிறைவைத்து லஞ்சம் கேட்ட வனக்கல்லூரி விரிவுரையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வனக்கல்லூரி விரிவுரையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரளா வயநாடு அருகே பரப்பனங்காடியை சேர்ந்தவர்கள் சுந்தரம்(34), அபுபக்கர்(36), மோகன்தாஸ்(45), சுந்தர். ரியல் எஸ்டேட் அதிபர்கள். நிலம் பார்ப்பதற்காக 2 நாள் முன்பு பொள்ளாச்சி வந்தனர். சிறுமுகையைச் சேர்ந்த நில புரோக்கர் ஜோஸ்(44), சுல்தான்பேட்டையில் நிலம் பார்க்க இவர்களை காரில் அழைத்துச் சென்றார்.

கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியன், வைகைடேமிலுள்ள வனப்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார்(52) ஆகியோர் சீருடையில் வந்து வழிமறித்து, காரை சோதனையிட்டனர். அதில் மண்ணுளிப்பாம்பு ஒரு பையில் இருந்ததை பறிமுதல் செய்தனர். ‘வன விதிகளின் படி மண்ணுளிப்பாம்பு வைத்திருப்பது குற்றம். கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும்’ என்று சிவகுமாரும், நெடுஞ்செழியனும் மிரட்டினர். ரூ.3 லட்சம் தருவதாக அவர்கள் கூறினர். ரூ.50 ஆயிரம் மட்டும் தந்தனர். ஒப்புக்கொண்டபடி மீதியுள்ள ரூ.2.5 லட்சத்தைத் தராததால் பொள்ளாச்சியிலுள்ள ஒரு விடுதியில் ஜோஸ்

தவிர 3 பேரையும் சிவக்குமார் அடைத்து வைத்துள்ளார்.
புரோக்கர் ஜோஸ், சிவக்குமார், நெடுஞ்செழியன் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் காரில் அவர்களாகவே மண்ணுளி பாம்பை போட்டு, பணம் பறிப்பதோடு, அதற்காக தங்களை கடத்தி சிறை வைத்துள்ள விவரத்தை சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள தனது நண்பருக்கு அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கிழக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விடுதியில் இருந்த 3 பேரையும் மீட்டனர். அவர்களுக்கு காவலாக இருந்த புரோக்கர் ஜோஸ் மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஸ்ரீராம்(24), போடிநாயக்கனூர் யோக ராஜ்(37) ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் சிவகுமார்(52) கைது செய்யப்பட்டார். கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனை தேடி வருகின்றனர்.

வைகை டேம் வனக்கல்லூரி டீன் மனோஜ்குமார் சர்க்கார் கூறுகை யில், சம்பவ நாளில் விரிவுரையாளர் சிவகுமார் பணிக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம்’ என்றார்.
போலீசார் கூறுகையில், ‘தலைமறைவான கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனைத் தேடி வருகிறோம். அவர் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள சிவகுமார் உடுமலையில் வனச்சரகராக இருந்தபோது சந்தனக்கட்டை கடத்தலுக்கு துணை போனதாக கிடைத்த புகாரின் பேரில், வனக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர்,’ என்றனர்.

வன அதிகாரி மீதும் நடவடிக்கை

பொள்ளாச்சியில் பரபரப்பு

‘ஸ்னேக் சிவக்குமார்’

உடுமலையில் வனச்சரகராக சிவகுமார் இருந்தபோது, மண்ணுளி பாம்பை வைத்து பலரை சிக்க வைத்து நடவடிக்கை எடுக்காதது போல் நாடகமாடி பணம் கறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளது வனத்துறையினர் அறிந்த விஷயமாம். இவருக்கு ‘ஸ்னேக் சிவக்குமார்’ என்கிற அடைமொழியும் உண்டாம். இவரது மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்காததால் தப்பி வந்துள்ளார். இம்முறை சிக்கியுள்ளார்.

கோவை அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்த இவருக்கு அங்கு ஒரு கல்யாண மண்டபம், மஞ்சி மில், நூற்பாலை மற்றும் 100 ஏக்கருக்கு மேல் தென்னை தோட்டம் உள்ளது.

27 ஜூலை 2010

சினிமா பார்க்க லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி கைது.


சென்னை : சினிமாவைப் பார்த்து தணிக்கைச் சான்று வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தணிக்கைத் துறை அதிகாரி ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார்.

புதிய சினிமா படம் ஒன்றின் தணிக்கைக்காக, தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தணிக்கை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்; அதற்கான 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் செலுத்தினார். ஆனால், தணிக்கை அதிகாரி ராஜசேகர், நீண்ட காலம் ஆகியும், படத்தைப் பார்க்க வராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது, படம் பார்க்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமெனக் கேட்டார்.

இதுகுறித்து சி.பி.ஐ.,யில் கோவிந்தராஜ் புகார் செய்தார். நேற்று மாலை லஞ்சப் பணத்தை வாங்கிய போது, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

24 ஜூலை 2010

"வீடியோ' சுப்ரமணியம் கைது .



திருப்பூர் : திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; "வீடியோ' சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத் துள்ள அய்யம்பாளையத் தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற் றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக் கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை "வீடியோ' சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று "வீடியோ' சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.


பரபரப்பு: "வீடியோ' சுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷனில் வைத்து சுப்ரமணியத்தை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், அவர் காலை உடைத்து விட்டதாகவும் தகவல் பரவியதால், ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருப்பூர் துணை மேயர் செந்தில் குமார், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் மற்றும் இதர கட்சிகள் சார்ந்த சிலர் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.00 மணி வரை பரபரப்பு நீடித்த நிலையில், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் "வீடியோ' சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.


லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட"வீடியோ' சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.

சுப்ரமணியம் "சமூக சேவை'யாளரா? கைது செய்யப்பட்ட "வீடியோ' சுப்ரமணியம், அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் பல்வேறு குற்றவாளிகளை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு வெளிச்சப்படுத்தியவர். தன்னை சமூக சேவையாளராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர். அதேநேரத்தில், இவரது வீடியோ வெளிச்சத்தில் விழுந்த சிலரை, ஊழல் ஆதாரத்தை வெளியிடாமல் மறைக்க, பல லட்சங்கள் கேட்டு அவர் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. லஞ்சம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்து சில மாதங்கள் கழிந்த நிலையில், இவர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதால், குறிப்பிட்ட காலம் வரை இவர் தன்னிடம் சிக்கிய ஊழல் பேர்வழியிடம் பேரம் பேசியதாகவும், பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

22 ஜூலை 2010

மின் இணைப்புக்கு லஞ்சம் இன்ஜினியர் கைது.




அவினாசி :ஜூலை ௨௨

மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜூனியர் இன்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும்களவுமாக சிக்கினார்.


அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் சந்தைகடை தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(23).இவர் அங்கு மூன்று கடைகள் கட்டி உள்ளார். வயரிங் பணி முடித்து, மின் இணைப்புக்காக பெருமாநல்லூர் மின்பகிர்மான அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இதுதொடர்பாக
இளநிலை பொறியாளர் குஞ்சிதபாதம்(50) என்பவரை அணுகியபோது, அவர் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.

ஈஸ்வரன்
கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கூடுதல் எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், சுந்தர்ராஜன், ஜெரால்டு அலெக்சாண்டர் ஆகியோர் இன்று மதியம் பெருமாநல்லூர் மின்அலுவலகம் வெளியே நின்று கண்காணித்தனர். இவர்கள் திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்துடன் ஈஸ்வரன் உள்ளே சென்றார். குஞ்சிதபாதம் பணத்தை வாங்கியபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.

அவர் தங்கியிருந்த மின்வாரிய குடியிருப்பிலும் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின், குஞ்சிதபாதத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.


21 ஜூலை 2010

பிரசவத்துக்கு லஞ்சம் ஜி.எச் ஊழியர்களிடம் அதிகாரி விசாரணை


கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று திடீர் முற்றுகையிட்டு, பிரசவ வார்டில் லஞ்சம் வசூலிப்பது குறித்து கண்காணிப்பாளர் மதிவாணனிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500, பெண் குழந்தை பிறந்தால் ரூ.100 முதல் 200 வரை லஞ்சமாக தர வேண்டும் என அங்கு பணியில் இருக்கும் பணியாளர்கள், நர்ஸ்கள் மிரட்டுகின்றனர். லஞ்சம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கண்காணிப்பாளர் மதிவாணன், ஆர்.எம்.ஓ. சிவப்பிரகாசம் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் சடகோபன் பிரசவ வார்டில் பணியாற்றும் பணியாளர்கள், நர்ஸ்களிடம் விசாரணை நடத்தினார்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களிடமும் விசாரணை நடந்தது.


19 ஜூலை 2010

லஞ்சம் ; பெண் போலீஸ் எஸ்.ஐ.,ரேகா கைது.




கமிஷனர் அனுப்பிய மனுவையே விசாரிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்


யானைக்கவுனி: விசாரணையை முடிக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். லாரி நிறுவனத்தை மேம்படுத்த தனது வீட்டின் பத்திரங்களை, சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் சில மாதங்களுக்கு முன் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை கட்டி தீர்த்துள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் காலதாமதம், கூடுதல் தவணை போன்ற காரணங்களுக்காக மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இது குறித்து, லட்சுமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில், யானைக்கவுனி எஸ்.ஐ.,ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி, தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, அங்கிருந்து வீட்டின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின் லட்சுமியிடம், தனது விசாரணைக்காக எஸ்.ஐ., ரேகா மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார்.""நான் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கட்டாயப்படுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., துர்க்கையாண்டி உத்தரவின்படி, எஸ்.பி., நிர்மல் குமார் ஜோஷி மேற்பார்வையில், டி.எஸ்,பி., சம்பந்தம், இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரேகா கேட்டு கொண்டதன் பேரில், கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார் லட்சுமி. அப்போது கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில், டூவீலரில் காத்திருந்த ரேகா ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அப்போது மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ.,ரேகாவை மடக்கிப் பிடித்தனர். லஞ்சமாக வாங்கிய ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.




17 ஜூலை 2010

வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கைது : லஞ்சம் தொடர்வதால் வேதனை.


ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், குடிநீர் இணைப்பு பெற லஞ்சம், பணத்தை மீட்டுத் தர லஞ்சம் என அனைத்து துறைகளும் தற்போது லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. சாதாரண வருமான சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றால், அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு கணிசமான தொகை கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். இதே போன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ் என அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லையேல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது. ஆனால் அரசோ, ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


மின்சார வாரியத்தில் மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, வாரியத்திற்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.ஊதிய உயர்வுக்கு பின், மின்வாரியம் சார்பில் தலைமை பொறியாளருக்கு மாதம் சாராசரியாக 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர், அந்த சம்பளம் போதாமல் ஊழியர் இடமாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. சமீபத்தில், சென்னையில் லஞ்சம் பெற்றதாக தலைமை இன்ஜினியர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது எடுத்துக்காட்டு. இவர்கள் தவிர வாரத்திற்கு இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்படுகின்றனர்.


மற்ற துறைகளில் லஞ்சம் பெற்றால் தடுக்க வேண்டிய போலீஸ் துறையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் லஞ்சம் பெறப்படுகிறது. சமீபத்தில் டி.எஸ்.பி., ஒருவர் மற்றும் எஸ்.ஐ., - தலைமைக்காவலர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று இன்னும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், குறிப்பிட்ட துறைகளுக்கு லஞ்சப் பணத்துடன் போனால் மட்டுமே காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அரசு சம்பளத்தை வாரி இறைத்த போதிலும், லஞ்சம் கரை புரள்வதும், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மட்டுமே, "குடும்பம் நடத்த முடியும் என்ற அவல நிலை' அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அரசு மீது லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிருப்தி



புதுடில்லி : "நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறைகளிடம் இருந்து, முறையான அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது' என, லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கடந்த மே மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, கடந்த மே மாதத்தில் மட்டும், உளவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த 110 அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், 52 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணை, நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது.இதில், அதிகபட்சமாக பணியாளர் துறை மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சகங்களைச் சேர்ந்த தலா 11 அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் ரவிசங்கர் ஸ்ரீவத்சவா, ராஜேஸ்குமார் ஸ்ரீவத்சவா, சஞ்சீவ் குமார், இந்திய வருவாய் துறை அதிகாரி பல்தேவ் சிங் சாந்து மற்றும் மும்பை சி.பி.ஐ.,யின் கூடுதல் எஸ்.பி., ஆர்.எஸ். பன்வார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், ராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும், அனுமதி கிடைக்காததால் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிக்கும்படி வலியுறுத்தி, அவர்கள் பணியாற்றும் துறைக்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள் ளன. இருந்தாலும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை துவங்கப்படும்,'' என்றார்.



15 ஜூலை 2010

காதலனை அடைய,நிச்சயித்த மாப்பிள்ளையை கொலை செய்த பெண் வக்கீல் .


பெங்களூர்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளையை காதலருடன் சேர்ந்து கொலை செய்த பெண்வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் பனசங்கரியை சேர்ந்தவர் சங்கர நாராயணா. இவர் ஒரு வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் ஒரு வக்கீல்.

சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடன் படித்த அருண் வர்மாவை காதலித்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் சிவப்பு கொடி காட்டியுள்ளனர். ஆனால், சுபா காதலை மறப்பதாயில்லை.

இதனால் சுபாவின் பெற்றோர் அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிரீஷ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயம் ஆனாலும் சுபாவுக்கு, கிரீஷீடன் வாழ விருப்பம் இல்லை.

இதனால் கிரீஷை கொலை செய்ய முடிவெடுத்தார் சுபா. இந்த கொலையை தன் காதலன் மற்றும் அவரின் உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோருடன் கூட்டாக செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று விருந்துக்கு போவது போல நாடகமாடி கிரீசை மோட்டார் சைக்கிளில் சுபா அழைத்து சென்றார். அப்போது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை பார்க்க வேண்டும் என்று கூறி சுபா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார். கிரீஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபாவுடன் சேர்ந்து விமானத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரம் அங்கு பதுங்கி இருந்த வெங்கடேஷ் கிரீஷை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கிரீஷ் உயிரிழந்தார்.

முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், சுபாவின் செல்போனை கைப்பற்றிய பிறகு தான் உண்மை தெரிந்தது. சுபாவிடம் நடத்திய விசாரணையில் அவரும், காதலனும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தார்கள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து சுபா, அவரது காதலர் அருண் வர்மா, அவரது உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலையின் வழக்கு விசாரணை, பெங்களூர் 17-வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெண்டிகொடி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.

ரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது




விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பூபதி (28). இவரது தம்பி ஏழுமலை கடந்த 6ம் தேதி கோகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி காயமடைந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 11ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
பூபதி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

நேற்று காலை பூபதி, விபத்து சான்றிதழ் பெற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆவண காப்பாளர் சந்திரசேகர், விபத்து சான்றிதழ் வழங்க 350 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். போதுமான பணமில்லை என பூபதி கூறியும் சான்றிதழ் தர சந்திரசேகர் மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து பூபதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று மாலை 4.30 மணிக்கு பூபதி, அரசு மருத்துவமனைக்கு சென்று 350 ரூபாய் பணத்தை சந்திரசேகரிடம் லஞ்சமாக வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சந்திரசேகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

14 ஜூலை 2010

லஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர்.



நாகர்கோவில், ஜூலை.14-
மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகரன் தம்பி. இவர் ரியல் எஸ்டேட், திருமண தகவல் மையம் போன்றவை நடத்தி வருகிறார்.

இதற்காக மார்த்தாண்டம் வடக்கு தெருவில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கினார். இதனை முறையாக பதிவு செய்ய குழித்துறையில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி விண்ணப்பித்தார்.

2 வாரங்கள் ஆகியும் அவரது மனு மீது எந்த நடவ டிக்கையும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் செய்ய வில்லை. இதையடுத்து சுதாகரன்தம்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று விபரம் கேட்டார். அப்போது, அங்கிருந்த அலுவலக “பி” பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணன் பதிவு சான்றிதழ் கேட்ட சுதா கரன்தம்பியை அணுகி தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாகவேலையை முடித்து தருவதாக கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்டு 2 நாட்களில் பணம் தருவதாக கூறிய சுதாகரன்தம்பி இது பற்றிய தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். அவர்கள் சுதாகரன்தம்பி யிடம் ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி கூறினர்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த யோசனைப் படி நேற்று மாலை சுதாகரன் தம்பி குழித்துறை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ரசாயண பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை அலுவலக உதவியாளர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர ராஜ், இன்ஸ் பெக்டர்கள் பீட்டர்பால், கண்ணன், அமிர்தராஜ், ஏட்டு குமரேசன் ஆகியோர் ராதா கிருஷ்ணனை கையும், களவு மாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்பு திருவட்டாரில் உள்ள அவரது வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர். இரவு வரை நடந்த சோதனைக்குப் பின்னர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தப்பட்டுநேற்று இரவே நாகர்கோவில் ஜெயி லில் அடைக்கப்பட்டார்.


13 ஜூலை 2010

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மானாம்பதி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (58). இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் அடுத்த வேலிங்கபட்டரை பகுதியில் வீடு மற்றும் காலி இடம் உள்ளது. அவரது இடத்தில் அருகில் வசிப்பவர் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிவானந்தம் தனது வீட்டை சுற்றியுள்ள நிலத்தை அளப்பதற்காக சர்வேயரை அணுகினார்.

அவர் கம்ப்யூட்டர் பட்டா கொண்டு வரும்படி கூறியுள்ளார். அதை பெறுவதற்காக சிவானந்தம் ஓரிக்கை கிராம நிர்வாக அலுவலர் ராமன் (54) என்பவரை அணுகினார். அவர் வீட்டுப் பத்திர நகல், வில்லங்க நகல் ஆகியவற்றை கேட்டு வாங்கினார். நேற்று காலை சிவானந்தம் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தார். அவர் "பட்டா வந்து விட்டது. 500 ரூபாய் பணம் கொடுத்து விட்டு பட்டாவை பெற்றுச் செல்லுங்கள்' என கூறியுள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத சிவானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், கங்காதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தத்திடம் வழங்கினர். அவர் அந்தப் பணத்துடன் மாலை 4 மணிக்கு ஓரிக்கை சென்றார். கிராம நிர்வாக அலுவலர் ராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மின்வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசகன் கைது .






¤.2 XyN• XtN• YÖjfV –ÁYÖ¡V RÛXÛU GÁÈÃVŸ ÙNÁÛ]›¥ ÛL‰ ÙNšV
ப்TyPÖŸ.

RÛXÛU GÁÈÃVŸ

ÙNÁÛ] A
ண்QÖNÖÛX›¥ E·[ R–²SÖ| –ÁNÖW YÖ¡V RÛXÛU A¨YXL†‡¥ RÛXÛU GÁÈÃVWÖL C£ப்TYŸ qÂYÖNL• (YV‰ 55). CYŸ —‰ HWÖ[UÖ] XtN “LÖŸL· i\ப்TyP]. T·¸eLWÛQ›¥ ER« ÙNV¼ÙTÖ½VÖ[WÖL T‚VÖ¼½V ÙN¥YWÖÇ GÁTYŸ J£ “LÖ¡Á ÚT¡¥ NÍÙTண்| ÙNšVப்Tyz£‹RÖŸ.

AYW‰ NÍÙT
ண்| E†RWÛY W†‰ÙNš‰ AY£eh —ண்|• ÚYÛX J‰ehYR¼LÖL ¤.4 XyN• XtN• RWÚYண்|• GÁ¿ RÛXÛU GÁÈÃVŸ qÂYÖNL• ÚLy|·[ÖŸ. CÁÙ]Ö£ GÁÈÃVŸ CR¼h CÛP†RWLWÖL ÙNV¥Ty| C£ef\ÖŸ. NÍÙTண்| E†RWÛY W†‰ÙNšYR¼h ¤.2 XyN˜•, —ண்|• ÚYÛX J‰eg| ÙNšYR¼h ¤.2 XyN˜• R†RÂÚV ‘¡†‰†RW ÚYண்|• GÁ¿• qÂYÖNL• ÚLy|·[ÖŸ.

ÛL‰

˜R¥LyPUÖL NÍÙT
ண்| E†RWÛY W†‰ ÙNšV ¤.2 XyN• RW ÙN¥YWÖÇ N•UR• ÙR¡«†‰·[ÖŸ. ‘Á]Ÿ C‰T¼½ WLpVUÖL XtNJ³ப்“ ÚTÖ§p¥ “LÖŸ ÙLÖ|†‰·[ÖŸ. XtN J³ப்“ ÚTÖ§Í sப்‘Wண்| Xyr– ÚU¼TÖŸÛY›¥, z.GÍ.‘.eL· SPWÖ^Á, ‡£SÖ°eLWr BfÚVÖŸ RÛXÛU›XÖ] p\ப் TÛP ÚTÖ§NÖŸ «NÖWÛQ ÚU¼ÙLÖண்P]Ÿ.

ÚS¼¿ CW° R]‰ A¨YXL†‡¥ ÛY†‰ ¤.2 XyN• XtN• YÖjfVÚTÖ‰ qÂYÖNL• ÛL
யு• L[°UÖL pef]ÖŸ. AYÛW ÛL‰ ÙNšR XtN J³ப்“ ÚTÖ§NÖŸ EP]zVÖL AYÛW ®y|eh AÛZ†‰oÙNÁ\]Ÿ.

¤.20 XyN• pefV‰

ÚU¼h UÖ•TX• AWjLSÖRÁ rWjLTÖÛR A£ÚL
யு·[ ÙWyz ÙR£«¥ C£eh• ÙYÍy f¥ A|ehUÖz hz›£ப்‘¥ RÛXÛU GÁÈÃVŸ qÂYÖNL• Yp†‰ Y‹RÖŸ. AYW‰ ®yz¥ CW° CWYÖL ÚNÖRÛ] SP†Rப்TyP‰. ÚNÖRÛ]›¥ ¤.20 XyN• TQ• pefVRÖL°•, B]Ö¥, XtN TQ• C¥ÛX GÁ¿ qÂYÖNL• U¿ப்TRÖL°• AR¼h¡V LQeÛL LÖண்‘ehUÖ¿ ÚLy|·[RÖL°• XtN J³ப்“ ÚTÖ§NÖŸ ÙR¡«†R]Ÿ.