புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஆகஸ்ட் 2010

நிலக்கோட்டை பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தர் கைது.


நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தரை போலீசார் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மாலைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(35). இவர், நிலக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக வாங்கிய நிலத்திற்கு பத்திரம் பதிவு செய்தார். ஒரு வாரத்திற்குப் பின், பதிவு செய்த பத்திரத்தை திருப்பித் தருமாறு தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம்(48) கேட்டார். அவர், பத்திரத்தை தருவதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டார். ராமமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று ராமமூர்த்தி, தலைமை எழுத்தர் ராஜ்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக