புதியவை :

Grab the widget  Tech Dreams

31 டிசம்பர் 2009

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது


ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூரில் எண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தன்ராஜ். இவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி சுனில்குமாரிடம் அளித்துள்ள புகாரில், எங்கள் கம்பெனி ஊழியர்களைப் பற்றி ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கும் பொறுப்பு,திருவொற்றியூரில் தொழிலாளர் நலத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றும் மேரி என்பவரிடம் உள்ளது.

இதுதொடர்பாக, அவரிடம் நாங்கள் விண்ணப்பம் அளித்திருந்தோம். ஆனால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பதாக மேரி கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து எஸ்பி லட்சுமி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வல்சராஜ் தலைமையிலான போலீசார் திருவொற்றியூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆபீசை கண்காணித்தனர். நேற்று மாலையில் பணத்தை தன்ராஜ் கொடுத்தபோது மேரியை கைது செய்தனர்.





29 டிசம்பர் 2009

பிச்சைக்காரரிடம் திருடிய போலீஸ்காரர்


செங்கல்பட்டு : வண்டலூரை சேர்ந்தவர் குமார்(43). ரயில்வே டிரைவர். செங்கல்பட்டு & கடற்கரை ரயிலை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஓட்டிச் சென்றார். கார்டு ராமதாஸ் உடன் சென்றுள்ளார். செங்கல்பட்டில் இருந்து 10.15 மணிக்கு திரும்ப வேண்டும். 45 நிமிடம் இருந்ததால் இருவரும் ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சீனிவாசன் (27) அங்கு வந்தார். ஓய்வு நேரம் என்பதால் லுங்கி அணிந்திருந்தார்.

பிளாட்பாரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரரின் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார் சீனிவாசன்.இதைப்பார்த்த குமாரும், ராமதாசும் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், போலீஸ்காரனான என்னையே திட்டுகிறீர்களா? என்று டிரைவர் குமாரை உயிர்நிலையில் எட்டி உதைத்து முகத்தில் குத்தியுள்ளார். அதே இடத்தில் குமார் மயங்கி விழுந்தார். ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காயாம்பு வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போலீஸ்காரர் சீனிவாசனை தேடி வருகிறார். இந்நிலையில், சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே போலீஸ் எஸ்பி உத்தரவிட்டார்.

ரயில்வே டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சீனிவாசனை உடனே கைது செய்யக்கோரி, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

28 டிசம்பர் 2009

ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது


விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்ச வசூலில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அரசு விடுமுறை தினமான நேற்று காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.

அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும்.

புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் டிச., 26ல், எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்திருந்தனர். 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

25 டிசம்பர் 2009

பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து, விவசாயி. இவர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய உதவி அலுவலர் ஜேம்ஸ் (வயது57) என்பவரை அணுகினார்.
இத்திட்டத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தில் கையெழுத்திட ரூ.200 தந்தால்தான் கையெழுத்திடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.
இது குறித்து காளிமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசின் அறிவுரையின்படி நேற்று மாலை 6 மணி அளவில் அதிகாரி ஜேம்ஸ் வீட்டிற்கு விவசாயி காளிமுத்து சென்று அவரிடம் ரூ.200-ஐ கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. குமாரசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா ஆகியோர் கையும், களவுமாக ஜேம்சை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் வேளாண்மை அலுவலக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


24 டிசம்பர் 2009

ஊழல் பணத்தால் திமுக வெற்றி: விஜயகாந்த்


ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது.​

திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது.​ எந்த ஊழலை ஒழிக்க பாடுபடுகிறோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.​ தாற்காலிகமான இந்த வெற்றி திமுகவினருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.​ ஆனால் எதிர்காலத்தில் இது அவர்களுக்கே ஆபத்தாகிவிடும்.​ "வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பாடம் நாளை திமுகவுக்கு கிடைக்கும்.​

வெற்றி,​​ தோல்வி சகஜம் என்று வேதாந்தம் பேசி பயனில்லை.​ இந்தத் தோல்வி ஏழைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.​ இதனால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்.​ எனவே தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.​ இந்த தர்ம யுத்தத்தில் எதிர்பாராமல் தேமுதிக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.​ கொட்டிய பண மழையிலும் நேர்மையாக நமக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.​

தமிழகத்தில் நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்பதை ஏற்று வாக்களித்த இந்த நல்லோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆட்டிப்படைக்கும் அதிகார சூழ்நிலையிலும் தேர்தல் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகளுக்கு என் இதயத்தில் என்றும் நீங்காத இடம் உண்டு.

வாக்காளர்களுக்கு தாராளமாக லஞ்சம் கொடுத்ததை பத்திரிகைகளும்,​​ தேர்தல் பார்வையாளர்களும் நன்கறிவார்கள்.​ நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.​ எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.​ அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


விருதுநகரில் நிதி நிறுவன மோசடிரூ.100 கோடிக்கு மேல் சுருட்டல்



விருதுநகர்:விருதுநகரில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்தை, கண்ணீருடன் மக்கள் முற்றுகையிட்டனர். நிதி நிறுவன பங்குதாரர் விஜயகுமார் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரும், குமாரலிங்கபுரம் சீனிவாசன் என்பவரும் புல்லலக்கோட்டை ரோடு விக்னேஷ் காலனியிலுள்ள ஒரு மாடியில், கோல்ட் பவர் மார்க்கெட்டிங்(பி)லிட்., என்ற பெயரில் நிதி நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன் துவக்கினர்.

இந்த நிதி நிறுவனத்தில் 5,000 ரூபாய் கட்டினால், ஐந்து மாதத்துக்கு 3,350 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது என்ற தகவல் மக்களிடையே பரவியது.இதனால், தினமும் நூற்றுக்கணக்கான பேர் நிதி நிறுவனத்தில் பணம் கட்டினர். முதலில் பணம் செலுத்தி யவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர் களுக்கு சரியாகப் பணம் வழங்கப்படவில்லை என நேற்று முன்தினம் தகவல் பரவியது. நேற்று காலையிலிருந்தே நிதி நிறுவனம் முன், பணம் போட்டவர்கள் அதிகளவில் கூடினர்.


இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி., பிச்சை, பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகாளை, எஸ்.ஐ.க்கள் கவுசல்யா, தேவமாதா ஆகியோர், அலுவலகத்தில் இருந்த பங்குதாரரர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், வெளியே நின்ற ஒருவரை அழைத்து வந்து விஜயகுமாரிடம் பேச அனுமதித்தனர்.

அவர் வெளியே வந்து கூடியிருந்தவர்களிடம், "நிதி நிறுவனத்தில் பணம் இல்லை. நவ., 17க்கு பின் பணம் செலுத்தியவர்களின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படவில்லை. ஜன., 18ல் பணம்வழங்க இயலாது என விஜயகுமார் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து, பணம் கட்டிய சரவணபாண்டியன், தாமோதரன் ஆகியோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். விஜயகுமாரை, போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு நிதி நிறுவனம் நடத்திய மற்றொருவரான சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர்."ஆசை' கண்ணை மறைக்குது: கூலி வேலை பார்ப்பவர்கள் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். ஆனால், போலீஸ், வக்கீல், ஆசிரியர்கள் பாகுபாடின்றி 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர். குறைந்த நாளில் நிறைய பணம் பார்க்கும், "ஆசை'யால் இவர்கள் ஏமாந்து நிற்கின்றனர்.





22 டிசம்பர் 2009

1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொய்யாமணி(கரூர் ) வி.ஏ.ஓ . நடராஜன் கைது .

குளித்தலை:கரூர் அருகே, லஞ்சம் வாங்கியதற்காக வி.ஏ.ஓ.,வை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் கோரப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை(50) என்பவர், கடந்த 18ம் தேதி, தனது நிலத்தின் பட்டா சிட்டா நகல் கேட்டு, பொய்யாமணியிலுள்ள வி.ஏ.ஓ., நடராஜனிடம்(52) மனு அளித்தார். நகலை 22ம் தேதி வாங்கி கொள்ளும்படியும், அதற்கு 1,000 ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியதையடுத்து, நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சின்னதுரை, புகார் கொடுத்தார்.வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நேற்று காலை 11.50 மணிக்கு சென்ற அவர், ரசாயனம் தடவிய ரூபாயை வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். அதை வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடமிருந்து கணக்கில் வராது வைத்திருந்த 8,350 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.கைதான வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலராகவும் உள்ளார்.

ஒரே அலுவலகத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் : உடுமலையில் கூத்து


உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் பணி புரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. உடுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவுத்துறை தலைவரால் செப்.,9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, காளியப்பன் சார்பதிவாளராக நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராஜகோபால் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தார். "பதிவுத் துறை தலைவருக்கு சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் அக்., 28ல் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மீண்டும் பணியில் சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துறைக்கு கடிதம் அனுப்பி விட்டு இன்று முதல் சார்பதிவாளராக மீண்டும் பணியாற்றுவேன்' என, கூறியபடியே, சார்பதிவாளர் சீட்டில் அமர்ந்து, பணிகளை கவனிக்க துவங்கினார்.

தற்போது சார்பதிவாளராக உள்ள காளியப்பன், சிறிது நேரத்தில் அலுவலகத்திற்குள் வந்தார். அவரது இருக்கையில், ராஜகோபால் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அவரும் அதே இடத்தில் இருக்கை போட்டு அமர்ந்தார். ஒரே அலுவலகத்தில், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அலுவலர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். பத்திரப்பதிவு பணிகளுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள், அலுவலகம் துவங்கியவுடன் நடந்த "கூத்தை' குழப்பத்துடன் ரசித்தனர்.

சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபால், டேபிளில் இருந்த பைல்களின் பெயர்களை கூப்பிட்டு பதிவு பணிகளுக்காக அழைத்தார். ஆனால், யார் உண்மையான சார்பதிவாளர் என குழப்பம் நீடித்ததால், பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்குள் செல்லவில்லை. பணிகள் முழுவதும் ஸ்தம்பித்ததால் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். துறை உத்தரவு இல்லாமல் அலுவலக பணிகளை மேற்கொள்ள முயன்றது குறித்து முன்னாள் அதிகாரி ராஜகோபாலிடம் சார்பதிவாளர் காளியப்பன் கேட்டார். அதற்கு, "உயர்நீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் நான் பணியில் ஈடுபவேன்' என ராஜகோபால் தெரிவித்தார். யாருக்கு பொறுப்பு என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதிவாளர் அலுவலகத்தில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பதிவாளர் ராஜகோபால் உடுமலை அலுவலகத்திற்கு வந்தார். சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபாலிடம்,"துறை உத்தரவு இல்லாமல் பணியில் சேர முடியாது; முறையான உத்தரவு பெற்ற பின் அலுவலகத்திற்குள் வரவும்' என தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட பதிவாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் பணியாற்றியதால் உடுமலை சார்பதிவாளராக இருந்த ராஜகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பதிவுத் துறை தலைவர் உத்தரவு இல்லாமல் மீண்டும் அவர் பணியில் சேரமுடியாது. விதிமுறைகளை மீறி சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அரசு அதிகாரிகளையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ராஜகோபால் செயல்பட்டுள்ளார். தற்போது, பணியில் உள்ள சார்பதிவாளர் காளியப்பனே தொடர்ந்து இந்த பணியில் நீடிப்பார். அவரிடம் மேற்கொள்ளப்படும் பதிவுகளே செல்லும். முறையான உத்தரவுகள் இல்லாமல் அரசு அலுவலகத்தில் நுழைந்து இடையூறு மற்றும் குழப்பம் ஏற்படுத்தியவர் மீது உடுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கோவையில் பல கோடி சுருட்டல் ; நூதன மோசடி


கோவை : கோவையில் நூதன பிசினசில் இறங்கிய தனியார் நிறுவனம், மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டதாக, அதிர்ச்சி புகார் கிளப்பியுள்ளனர் முதலீட்டாளர்கள். கோவை, சாயிபாபா காலனியில், "யூரோபே அசோசியேட்ஸ்' எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பெயரில், ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால், ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி "ஆன்-லைனில்' குறிப்பிட்ட சில விளம்பரங்களை ரெகுலராக பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், ஆன்-லைனில் வெளியாகும் விளம்பரக் கட்டணத்தில், 50 சதவீதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகவும், இந்நிறுவனம் அறிவித்தது.

இதை நம்பி, பலர் இத்திட்டத்தில் இணைந்து பணம் செலுத்தினர். மக்களின் நம்பிக்கையை பெற, ஆரம்பத்தில் சிலருக்கு பணம் வழங்கிய நிறுவனத்தினர், கடந்த அக்டோபரில், நிறுவன அலுவலகத்தை மூடி விட்டு "எஸ்கேப்' ஆயினர். அங்கு பணம் செலுத்தி ஏமாந்த சிலர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மோசடியில் பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: கடந்த 2008ல், ஆன்-லைன் விளம்பரம் பார்க்க, ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விளம்பரங்களை பார்ப்பவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் 12 மாதம் வரை கொடுப்பதாகவும் கூறினர். 10 நாட்களுக்குள் 160 விளம்பரங்களை பார்க்க வேண்டும் என்றனர்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் விளம்பரம் பெற்று தமது இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக பெரிய தொகைகளை அவர்களிடம் பெற்றுக் கொண்டது. தமது இணைய தள விளம்பரங்களை பல்லாயிரம் பேர் பார்ப்பதாக "ஹிட்' எண்ணிக்கை கணக்கு காண்பிக்க, எங்களிடமும் பணம் பெற்று விளம்பரங்களை பார்க்க வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்வீடன் நாட்டில் தலைமை அலுவலகம் உள்ளதாகவும், இந்தியாவில் டில்லியில் பிரதான அலுவலகம் உள்ளதாகவும் கூறியதை நம்பி ஏமாந்தோம். கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கோவையில் 60 ஆயிரம் நபர்கள் இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஐயாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மாதங்களாக சாயிபாபா காலனியில் உள்ள நிறுவனத்தை திறக்க வில்லை. பிற பகுதிகளில் இருந்த அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், திருமுருகன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.



10 டிசம்பர் 2009

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர் மீது புகார்: டீன் விசாரணை

தமிழகத்தில் 2-வது பெரிய ஆஸ்பத்திரியாக திகழ்வது மதுரை அரசு ஆஸ்பத்திரியாகும். தென் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
இங்கு வரும் நோயாளிகளிடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக அடிக்கடி புகார் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர், திடீர் என சென்று சோதனையிட்டு சிலரை பிடித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் லஞ்சம் வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது அரசு ஆஸ் பத்திரியிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. இங்கு பாலமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இவரது இறப்பு சான்றிதழ் கோரி அவரது உறவினர் பாலமுருகன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். சான்றிதழுக்கு ரு.150 தந்தால்தான் கொடுக்க முடியும் என சில ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாலமுருகன் போலீசிலும், அரசு ஆஸ்பத்திரி டீன்னிடமும் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் டீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


09 டிசம்பர் 2009

ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது

ஸ்ரீபெரும்புதூர்,டிச,9. மின் இணைப்பு வழங்க ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி இவர் அதே பகுதியில் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தண்டலம் கிராமத்தில் உள்ள மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலம் மின் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கடேசன் ரூ.3000 பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சுப்ரமணி இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து புதன்கிழமை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சுப்ரமணியை ரூ 3000 பணத்தை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியிடம் இருந்து வெங்கடேசன் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் வெங்கடேசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ரூ.10 ஆயிரம் லஞ்சம் : துணை நில ஆய்வாளர் கைது


சென்னை : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை நில ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகர்(42). பி.எஸ்.என்.எல்.,லில் பணிபுரிந்து வருகிறார். குடியிருக்கும் வீட்டிற்கு, சொந்த பெயரில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக, தாம்பரம் நத்தம் நில வரித்திட்டம், துணை நில ஆய்வாளர் கபிலனை(52) அணுகினார். பட்டா வழங்குவதற்கு கபிலன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் நேற்றும், மீதி 40 ஆயிரம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை அன்றும் தரும்படி தனசேகரிடம் கூறினார். இதுகுறித்து தனசேகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை நகர் பிரிவு-1 டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமிகாந்தன் ஆகியோர் நேற்று காலை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்

தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடைக்கு தனசேகரை வரவைத்த கபிலன், லஞ்சப் பணம் 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கபிலனை கையும், களவுமாக கைது செய்தனர். கபிலனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கபிலனின் பாக்கெட்டில் இருந்த 26 ஆயிரத்து 800 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், கபிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.




08 டிசம்பர் 2009

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்: வீடியோ ஆதாரத்தால் சிக்கினார்

திருப்பூரில் சிட்டா அடங்கல் வழங்க 4,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் தாராபுரம் ரோடு நாச்சிமுத்து கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், திருப்பூர் தாலுகா அலுவலகம் நில அளவைத் துறைக்கு சிட்டா அடங்கல் கோரி விண்ணப்பித்தார். நகர வி.ஏ.ஓ., பொன்னுசாமி மற்றும் நில அளவையர் சண்முகம் ஆகியோர் சிட்டா அடங்கல் வழங்க தாமதம் செய்து, ஒரு மாதம் காலம் கடத்தினர். பின், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

பக்ரீத் அரசு விடுமுறை தினத்தில், ஜீவானந்தத்தின் வீட்டுக்கு, வி.ஏ.ஓ., பொன்னுசாமி, நில அளவையர் சண்முகம் உதவியாளர்களுடன் வந்து இடத்தை அளந்தனர். பின், லஞ்சமாகக் கேட்ட பணத்தை தரும்படி பேசினர். பேரத்துக்கு பின், 20 ஆயிரமாக லஞ்சப் பணம் குறைக்கப்பட்டு, முன்பணமாக 4,500 ரூபாயை தன் வீட்டுக்கு வெளியே ஜீவானந்தம், வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். இதை, ஜீவானந்தத்தின் சகோதரர் சுப்ரமணியன், வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.வி.ஏ.ஓ., லஞ்சம் பெற்றது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வி.ஏ.ஓ., பொன்னுசாமியை ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் இட மாற்றம் செய்யப்பட்டு, அவரிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது.

04 டிசம்பர் 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.22 ஆயிரத்து 670 பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 4-
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜன். இவருக்கு சொந்தமான வேன் கடந்த 23.11.09 அன்று கிருஷ்ணன்கோவில் அருகே விபத்துக்கு உள்ளானது. அந்த வேன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வேனை எடுத்து வருவதற்காக தேன்ராஜன் தனது டிரைவர் குருசாமி என்பவரை அனுப்பினார். இதற்காக குருசாமி வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் வேனை விடமுடியும் என்று கூறிய தோடு ஆர்.சி.புக் மற்றும் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிரைவர் குருசாமி தனது உரிமையாளர் தேன் ராஜனிடம் கூறினார். இதையடுத்து தேன்ராஜன் விருதுநகர் லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி டிரைவர் குருசாமி நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார். ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த கணேஷ் சுப்பிரமணியம் உங்களுடைய ஆர்.சி.புத்தகம் மற்றும் சான்றிதழ்களை விருதுநகருக்கு அனுப்பி விட்டேன் என்றும், அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
அந்த சமயம் வெளியில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்களை கண்டதும் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு உலாவிக்கொண்டிருந்த புரோக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இரவு 10 மணி வரை போலீசார் நடத்திய சோதனையில் ஏஜெண்டுகள் சரவணன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 670 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம், தற்காலிக ஊழியர் சிங்காரம் ஆகியோரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தெரிவித்தார்.


03 டிசம்பர் 2009

திருச்சியை சேர்ந்தவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு சப்-இன்ஸ்பெக்டர் கைது

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவர் சில ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்தாஸ் திருக்கடையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் நிலம் வாங்க ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஒப்பந்த காலத்திற்குள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக அருள்தாசிடம், பாலமுருகன் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அருள்தாசின் பெயருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படவிலலை.
இதனால் அருள்தாஸ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவை பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன்(52) ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அருள்தாஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்கவாசகத்திடம் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் பணத்தை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து தருவதாக சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கூறினார்.
அதன்படி நேற்று மாலை ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அருள்தாஸ் சென்றார். பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேஜையில் வைத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்க வாசகம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரவேலு மற்றும் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

இதன் பின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் பொறையாறில் குணசேகரன் தங்கியிருந்த தனியார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.



30 நவம்பர் 2009

ரூ.4 ஆயிரம் கோடி ஊழல்: மதுகோடா “திடீர்” கைது

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா ஊழல் செய்து ரூ.4 ஆயிரம் கோடி சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லஞ்சம் வாங்கியும், ஹவாலா மூலம் பணம் பரிமாற்றம் செய்தும் இவ்வளவு சொத்துக்களை சேர்த்து இருந்தார்.
இது தொடர்பாக அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மதுகோடா வீடு மற்றும் அவருடைய நிறுவனங்களில் அதிரடி சோதனையும் நடத்தினார்கள்.
மதுகோடாவிடமும் நேரடியாக விசாரணை நடந்தது. இதில் அவர் ஊழல் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடந்ததால் அவர் கைதாவது தள்ளி போனது.
மதுகோடா என்னை தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் வருமானவரி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று புகார் கூறினார். எனவே அவரை கைது செய்யாமல் இருந்தனர்.
இப்போது முதல் கட்ட தேர்தல் முடிந்து விட்டதுடன் 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிந்து விட்டதால் மதுகோடாவை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று திடீரென கைது செய்தனர்.
கைபேசா என்ற இடத்தில் தங்கியிருந்த அவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இது பற்றி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “மது கோடாவை விசாரணைக்கு வரும்படி 2-வது முறையாக வாரண்டு அனுப்பியும் வரவில்லை. எனவே அவரை கைது செய்தோம்” என்றனர்.


28 நவம்பர் 2009

போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி. கைது

அறந்தாங்கி, நவ.28-
பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டாக சேது பணியாற்றி வருகிறார். இவரை தஞ்சாவூர் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அமைப்பாளர் மாதவன் மற்றும் பொது செயலாளர் ஏ.எச்.அமீர்ஜான் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி அன்று சந்தித்து பேசினார்கள்.
அப்போது பொன்ன மராவதியை சேர்ந்த ராமசாமி, நமணசமுத்திரத்தை சேர்ந்த லெனின், நற்சாந்துபட்டியை சேர்ந்த அஜீஸ், காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை அருள் சகோதரி ஜோஸ் ஆகிய 4 பேரும் போலி டாக்டர்கள் என்றும், இவர்கள் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அத்துடன் அவர்கள் போலி டாக்டர்கள் என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கொடுத்தார்கள்.
இதை கேட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
உடனே 2 பேரும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது அலுவலகத்துக்கு சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததும் மாதவன் மற்றும் அமீர்ஜான் ஆகிய 2 பேரும் மாடியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தனர். உடனே லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்பரசன் ஆகியோர் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு விரைந்து சென்று ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு சேதுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அதிகாரி “சஸ்பெண்டு” விருதுநகர் கலெக்டர் அதிரடி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டியபட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் வேலு. இவரிடம் அதே ஊரை சேர்ந்த காளியம்மாள் என்ற பெண் பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பம் அளித்திருந்தார். அதற்கான சான்றிதழ் வழங்குவதற்கு காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்று உள்ளார்.
இது குறித்து காளியம் மாள் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்யனிடம் நேரடியாக சென்று புகார் மனு அளித்தார். அதன் பேரில் கலெக்டர் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையா என்பதை அறிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து வேலுவை சஸ்பெண்டு செய்து கலெக்டர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை கிராம நிர்வாக அதிகாரிகளை பீதி அடைய செய்துள்ளது.


27 நவம்பர் 2009

காஞ்சீபுரத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கைது

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (27) இவர் காஞ்சீபுரம் நகர போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் மூங்கில் மண்டபம் சந்திப்பில் பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த காஞ்சீபுரம் தேவி நகர் பகுதியை சேர்ந்த சவுரிராஜன் என்பவ ரின் மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் விசா ரணை செய்தார்.
அப்போது அவர் வேலை பார்க்கும் அடையாள அட்டையை பறித்து வைத்து கொண்டு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடு இல்லை என்றால் உன்மீது பல வழக்குகளை போட்டு விடுவேன் என்று மிரட்டினார். அவர் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி சென்ற சவுரிராஜன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. விஜயராகவனிடம் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.


26 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கிய கல்குளம் சர்வேயர் கைது .


நாகர்கோவிலை அடுத்த அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது தம்பி ரகுபதி. இவர்களுக்கு சொந்தமான 6 சென்ட், கல்குளம் தாலுகா கடியப்பட்டணம் பகுதியில் உள்ளது. இச்சொத்தினை பிரித்து உட்பிரிவு செய்ய பார்த்தசாரதியும், ரகுபதியும் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் சொத்தை பிரித்து உட்பிரிவு செய்யக்கோரி கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இது பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி கல்குளம் தாலுகா சர்வேயர் மனோகரனுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சர்வேயர் மனோகரன் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் நில உரிமையாளர்கள் பார்த்தசாரதி, ரகுபதி இருவரிடமும் இது தொடர்பான அறிக்கை கொடுக்க தனக்கு ரூ.1000 பணம் தரும்படி கேட்டார்.
சர்வேயர் மனோகரன் லஞ்சம் கேட்டது பற்றி பார்த்தசாரதி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் மனோகரனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி பார்த்தசாரதி பணத்தை தன்வீட்டில் வந்து வாங்கி கொள்ளும்படி மனோகரனிடம் கூறினார். ஆனால் அவர் இன்று காலை பார்த்தசாரதிக்கு டெலிபோன் செய்து பணத்தை தனது வீட்டிற்கு வந்து தரும்படி தெரிவித்தார். இதனை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்து விட்டு பார்த்தசாரதி லஞ்சப்பணத்துடன் இன்று காலை 9 மணிக்கு சர்வேயர் மனோகரன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஹெக்டர் தர்மராஜ், கண்ணன், பீட்டர்பால், ஏட்டு குமரேசன் ஆகியோர் மறைந்து இருந்தனர். அவர்கள் மனோகரன் லஞ்சப்பணத்தை வாங்கும் போது அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டிலும் சோதனை நடத்தினர். காலை 9மணி முதல் பகல் 11 மணிவரை இச்சோதனை நீடித்தது. இதில் சர்வேயர் மனோகரன் இதுபோல பலரிடம் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை நாகர்கோவில் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.
லஞ்சம் வாங்கிய சர்வேயரை அவரது வீட்டுக்கு சென்றே போலீசார் கைது செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


25 நவம்பர் 2009

விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய 50ஏஜெண்டுகள்; வீடு, நிலம் வாங்கி குவித்தனர்

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் 50 ஏஜெண்டுகள், சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரும் சரக்குகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதித்து வருவதாக சி.பி.ஐ.க்கு ஏராளமான புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் 50 சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்த சுங்க இலாகா அதிகாரிகள், பாஸ்கர், அறிவு டைநம்பி, நாகேஸ்வரி, பழனியப்பன், ஜக்மோகன், ஆசைத்தம்பி, மஞ்சுளா, பெஞ்சமின், கண்ணன் ஆகிய 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கும் ஏஜெண்ட் குமார் சிக்கியிருந்தார்.
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் ரொக்கப் பணம், ரூ.25 லட்சம் நகைகளும் பறிமுதல் செய்தனர். பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் லாக்கரில் பணம், நகைகளை வைத்திருக்கவில்லை. 2 லாக்கர் மட்டும் திறந்து சோத னையிடப்பட்டது. அதில் சில சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து குழந்தைகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மட்டமான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பொம்மைகள், சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் அவற்றிற்குள் போதை பொருட்கள் கூட இருக்கலாம். கூரியர் பார்சல்கள், என பெரும்பாலான பார்சல்களை சோதனை செய்யாமல் இறக்குமதி செய்வது என்பது கடத்தல் குற்றத்திற்கு சமமானது.
அத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை தாராளமாக லஞ்ச, பணத்தை பெற்றுக்கொண்டு மேற்கண்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை பகிர்ந்து கொடுப்ப தற்கென்றே சென்னையில் மட்டும் குமார் போல 50 ரகசிய ஏஜெண்டுகள் செயல் படுகின்றார்கள். இவர்களின் வேலை வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில் ரகசிய எண்ணை குறித்து விடுவார்கள். அது இருக்கும் சரக்கு பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பி விடுவர்.
அவர்களுக்குரிய லஞ்ச பணத்தை வீடு களுக்கு சென்றோ, அல்லது அவர் களது ரகசிய வங்கி கணக்கிலோ ஏஜெண்டுகள் கட்டி விடுகின்றார்கள். அந்த பதவிகளுக்கு தகுந்தாற்போல் தினந்தோறும் லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தினந்தோறும் ரூ.10 லட்சம் வரை கைமாறியுள்ளது.
பெண் அதிகாரிகளை கவருவதற்கு நவீன மாடல்களில் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளை ஏஜெண்டுகள் கொடுத்துள்ளனர். அதிகாரிகளின் செல்போன் சிம்கார்டை ஆய்வு செய்ததில் ஏராளமான ஏஜெண்டுகளின் செல்போன் நம்பர்களும், பெயர்களும் கிடைத்துள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம்.
ஏஜெண்டுகள் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு வராமலேயே அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் குமார் மட்டும் கொஞ்சம் அதிகமாக நேரடியாக வந்து விமான நிலையத்திலேயே கந்து வட்டிகாரர் போல வசூலில் ஈடுபட்டதால் எளிதில் சிக்கி விட்டார். தப்பி ஓடிய ராஜ்குமார் என்வரை தேடி வருகிறோம். அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.6 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து சுங்க இலாகாவில் பணிபுரியும் வேறு சில அதிகாரிகளையும் கண்காணித்து வருகிறோம். ஏஜெண்டுகளிடம் பேசுகிறார்களா? என்பதையும், ஆய்வு செய்து வருகிறோம். வருங்காலங்களில் விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுக்கு உதவும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
சுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி கூறியதாவது:-
ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சுங்க இலாகாவிலேயே தனி அமைப்பு உள்ளது. அதன் மூலம் அவ்வப் போது லஞ்ச புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீதுசஸ்பெண்ட், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்சம் பெறும் முறைகேடான அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் கேட்கும் சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி புகார் செய்ய விரும்புவோர் போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாட்டவ்ஸ் சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கும், splacchne.cbi.gov.in என்ற இணைய தள முகவரிக்கும், 044-28255899 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 044-28213828 என்ற பேக்ஸ் எண்ணிலும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கைதான சுங்க இலாகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.


24 நவம்பர் 2009

ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் 10 அதிகாரிகள் முறைகேடு கண்டுபிடிப்பு





சென்னை விமான நிலைய சுங்கத்துரை அலுவலகத்தில் நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. 10 அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து இந்த சோதனை நடப்பதால, விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது.


சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் திடீரென வந்தனர். கார்க்கோ பகுதிக்கு வந்த அவர்கள், வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பிரிவு, வெளிநாடுகளில் இருந்து பார்சல் வரும் பகுதி மற்றும் கார்கோவில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

முதலில், இப்பகுதியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், கடைநிலை சிப்பந்திகள் உட்பட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்Õ செய்யும்படி கூறினர். லேன்ட் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. பின்னர், கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து என்னென்ன பார்சல்கள் வந்துள்ளன, அதற்கு போடப்பட்ட வரி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கார்கோ பகுதியில், மிக முக்கியமான 12 நிறுவனங்கள், பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏதாவது வழங்கப்பட்டதா, அன்பளிப்பு மற்றும் லஞ்சம் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தினர். வழக்கமாக இதுபோன்ற சிபிஐ சோதனை இங்கு நடப்பது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சோதனை நடத்தி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் இந்த முறை, நேற்று இரவு தொடங்கிய இன்றும் தொடர்ந்து நடக்கிறது.


12 மணி நேரத்துக்கும் மேல் நீடிப்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று காலை வரை ரொக்கப்பணம் ரூ.9 லட்சம் சிக்கியுள்ளது. 10 சுங்கத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை வரி விதிப்பது வழக்கம்.

ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் குறைத்து வரி போட்டு விட்டு ஒரு கணிசமான தொகையை அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட பணம்தான் ரூ.9 லட்சம் என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணையும், சோதனையும் நடந்து வருகிறது. ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

23 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்


குளச்சல்: லஞ்சம் வாங்கும் குமரி மாவட்ட அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்திடவும், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களின் சொத்து கணக்குகளை வெளியிடவும், கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்திட கேட்பது, வெளிநாட்டு கப்பல்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்கலாம் என்ற சட்டத்தை அமல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

21 நவம்பர் 2009

கிருஷ்ணகிரி மாமூல் போலீசார் !



உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி, அங்குள்ள நவீன அரிசி ஆலைகளில், பாலிஷ் செய்யப்பட்டு, மீண்டும் அதிக விலைக்கு தமிழகத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதனால், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர். பெரும்பாலான அரிசி கடத்தல் காரர்கள், முக்கிய அரசியல் புள்ளிகளின் தயவோடு செயல்பட்டு வந்தனர்.அரிசி கடத்தல் அதிகரித்து வந்த வேளையில், உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து செயலாற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு சுற்றுக்காவல் படை அமைக்கப்பட்டது.இதில், ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு ஏட்டுகள் பணி அமர்த்தப்பட்டனர்.

சிறப்பு சுற்றுக்காவல் படையினர், மாநில எல்லை பகுதி, செக் -போஸ்ட்கள் மட்டுமன்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்து, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.ஓராண்டுக்கும் மேலாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும், ஒரு கடத்தல் லாரியை கூட, உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசாரும் பிடிக்கவில்லை.இதற்காக, அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்து விடுகின்றனர். தங்களை ஒரு செக் - போஸ்ட்டில் அமரவைத்து விட்டு, மற்ற செக் - போஸ்ட் வழியாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அரிசி கடத்தல் லாரிகளை கர்நாடகாவுக்கு அனுப்பி விடுவதாக, சிறப்பு சுற்றுக்காவல் படையினர் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.

சிறப்பு சுற்றுக்காவல் படை போலீசார் அரிசி கடத்தலை தடுக்காமல், அந்தந்த பகுதியில் மணல் மற்றும் கற்களை ஏற்றி வரும் டிராக்டர்களை நிறுத்தி பணம் வசூல் செய்வதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டியுள்ளனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சிறப்பு சுற்றுக்காவல் படையினரும், தற்போது, மாமூல் வசூலுக்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகாவுக்கு, அமோகமாக அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனால், கடத்தல்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி: ஒருவர் கைது


சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவருக்கு சைப்ரஸ் அல்லது பிஜூ தீவில் வேலை வாங்கித்தருவதாக, கரூர், ஈசா நத்தம் பகுதியைச் சேர்ந்த மருதப்ப கவுண்டர் மகன் சரவணவேலு கூறியுள்ளார். இதற்காக, 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை சரவணவேலுவிடம் மணிகண்டன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சரவணவேலு, வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூரை சேர்ந்த சரவண வேலுவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டது


சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 54 நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


நீதிபதி எலிப் தர்மாராவ்: மனைவி பத்மா புஷ்பாஞ்சலிக்கு திருமணத்தின் போது, ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம், அனந்தவரம் கிராமத்தில் சீதனமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம். மனைவி பெயரில் 10 சவரன் நகை. கார் லோன் பாக்கி மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 331 ரூபாய். மாதம் 8,850 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது.

நீதிபதி டி.முருகேசன்: இரண்டரை சவரன் நகை, மனைவி பெயரில் 65 சவரன் நகை. மனைவி பெயரில் ஒன்பது லட்சத்து 95 ஆயிரத்து 82 ரூபாய் மதிப்பிலான லான்சர் டொயட்டா இன்னோவா கார் (பழைய வாகனத்தை விற்று, நான்கு லட்சம் ரூபாய் கடன் மூலம் வாங்கப்பட்டது) மனைவி பெயரில் விவசாயக் கடன் பாக்கி 2.68 லட்சம் ரூபாய். கார் லோன் பாக்கி 2.54 லட்சம் ரூபாய்.


நீதிபதி ரவிராஜ பாண்டியன்: கும்பகோணம் அருகே இரு கிராமங்களில் உள்ள நிலங்களை விற்பனை செய்தது உட்பட 77 லட்சத்து 16 ஆயிரத்து 840 ரூபாய் இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு. மோதிரம், சங்கிலி மற்றும் ருத்திராட்ச மாலை சேர்த்து 80 கிராம் நகை. மனைவி பெயரில் 300 கிராம் நகை. மகள் பெயரில் 300 கிராம் நகை. கனரா வங்கியில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரத்து 66 ரூபாய் சேமிப்பு.

நீதிபதி சொக்கலிங்கம்: சிவகங்கை மாவட்டத்தில் 12.4 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு. இந்தியன் வங்கி ஐகோர்ட் கிளையில் 25 ஆயிரம் ரூபாய் சேமிப்பு. 100 சவரன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி. மனைவி பெயரில் 175 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி. அரசிடம் இருந்து வீட்டுவசதிக் கடன் 7.5 லட்சம் ரூபாய். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

நீதிபதி நாகப்பன்: மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 754 ரூபாய் சேமிப்பு. வைப்பீடு ஒரு கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 763 ரூபாய். 10 சவரன் நகை. மனைவி நடத்தி வரும் வர்த்தகத்தில் முதலீடு, டிபாசிட் சேர்த்து இரண்டு கோடியே 88 லட்சத்து 84 ஆயிரத்து 16 ரூபாய். 100 சவரன் நகை; ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வைரம்.


நீதிபதி பானுமதி: கணவர் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலம் (மூதாதையர் சொத்து). 30 சவரன் நகை. கணவர் பெயரில் இரு சக்கர வாகனம். கடன் 2.5 லட்சம் ரூபாய்.



நீதிபதி மோகன்ராம்: தாய்க்கு சொந்தமான நகை 400 கிராம், திருமணத்தின் போது மனைவிக்கு 1,000 கிராம் தங்க, வைர நகைகள். 10 கிலோ வெள்ளி. 7.54 லட்சம் மதிப்பில் ஹோண்டா சிட்டி கார். மகள் பெயரில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹோண்டா மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஜோதிமணி: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வீடு, விவசாய நிலங்கள். திருமணத்தின் போது, மனைவிக்கு சீதனமாக 100 சவரன் நகை. ரூ.5.92 லட்சம் மதிப்பில் மாருதி கார்.


நீதிபதி ரகுபதி: தேனி மாவட்டத்தில் 51.76 ஏக்கர் விவசாய நிலம். திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முறையே 18 சென்ட், 19.3 சென்ட் பரப்பளவில் பண்ணை நிலங்கள். இந்தியன் வங்கியில் 8.62 லட்சம் ரூபாய் சேமிப்பு. மனைவி, மகள் பெயரில் 195 சவரன் தங்க நகைகள்; 10 கிலோ வெள்ளி. மகள் பெயரில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். ஹோண்டா சிட்டி கார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரர்களிடம் 28.5 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்: திருமணத்தின் போது பெறப்பட்ட, பின் வாங்கிய நகைகள் 200 சவரன்; 15 காரட் வைரம்; ஏழு கிலோ வெள்ளி. சிட்டி யூனியன் வங்கியில் 11.38 லட்சம் ரூபாய் கடன்.


நீதிபதி பாட்ஷா: இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கூட்டுறவு வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 2.98 லட்சம் ரூபாய் சேமிப்பு. 81.5 சவரன் தங்க நகை. ஒரு கிலோ வெள்ளி. 7.17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண் டாய் அக்ஸன்ட் கார் (மாதத் தவணையில் வாங்கியது).

நீதிபதி ஜனார்த்தன ராஜா: ராஜபாளையத்தில் குடும்பச் சொத்து, விவசாய நிலம் 10 ஏக்கர். கடன் பாக்கி 8.9 லட்சம் ரூபாய். மந்தைவெளி கனரா வங்கி, ஐகோர்ட் இந்தியன் வங்கி கிளையில் 41.75 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. திருமணத்தின் போது சீதனமாக 75 சவரன் தங்க நகைகள்.


நீதிபதி பால்வசந்தகுமார்: கன்னியாகுமரி, சென்னையில் குடியிருப்பு வீடுகள். கன்னியாகுமரி மாவட்டம் வியனூர் கிராமத்தில் மனைவி பெயரில் விவசாய நிலங்கள். மனைவி, மகளுடன் சேர்த்து மொத்த வங்கி சேமிப்பு மற்றும் கையிருப்பு பணம் 7.45 லட்சம் ரூபாய். 80 சவரன் தங்க நகைகள். 4.96 லட்சம் ரூபாய் மதிப்பில் மாருதி ஸ்விப்ட் கார். 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் (மாதத் தவணை ரூ.11,600)


நீதிபதி சுகுணா: வங்கிகளில் சேமிப்பு 24.47 லட்சம் ரூபாய். 40 சவரன் தங்க நகை; 900 கிராம் வெள்ளி. 4.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண்டாய் கார்.


நீதிபதி ஜெய்சந்திரன்: சென்னை பெசன்ட் நகர், மடிப்பாக்கத்தில் வீடுகள், கரூர் மாவட்டத்தில் 55.27 ஏக்கர் விவசாய நிலம். ஐகோர்ட் இந்தியன் வங்கிக் கிளையில், 18 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு. வைர மோதிரம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 1.25 லட்சம் ரூபாய் கடன், 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். 7.5 லட்சம் ரூபாய் அரசுக் கடன். மகன் விஷால் அபிந்த் கல்விக் கடன் 11.21 லட்சம் ரூபாய். கொடைக்கானலில் மனைவி பெயரில் 31.5 ஏக்கர் நிலம். 600 கிராம் தங்க நகைகள், நான்கு கிலோ வெள்ளி. ஆறு காரட் வைர நகைகள். இண்டிகா கார்.



நீதிபதி ராஜேஸ்வரன்: காஞ்சிபுரத்தில் வீடு. 15 சவரன் நகை, மனைவி பெயரில் 60 சவரன் நகை. இந்தியன் வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் (ரூ.2.87 லட்சம் செலுத்தப்பட்டது). மனைவி பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடன்.

நீதிபதி தனபாலன்: வீடு, இரண்டு ஏக்கர் விவசாய நிலம். மனைவி, குழந்தைகள் பெயரில் 11.75 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 21 சவரன் நகை, மனைவி, மகன் பெயரில் 56 சவரன் நகை. மகனுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வீட்டுக் கடன் பாக்கி 13.77 லட்சம் ரூபாய்.


நீதிபதி சுதாகர்: வேலூர் மாவட்டத்தில் வீடுகள், 2.87 எக்டேர் விவசாய நிலம்.


நீதிபதி தமிழ்வாணன்: வீடு, விவசாய நிலங்கள். 15 சவரன் தங்க நகைகள், மனைவி பெயரில் 57 சவரன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி. மனைவி பெயரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் போர்டு கார். 15.44 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்.

நீதிபதி ஜெயபால்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு, மனைவி பெயரில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாய நிலங்கள், மூன்று சவரன் நகை, அம்பாசிடர் டீசல் கார். மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 20 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.

நீதிபதி வெங்கட்ராமன்: சென்னை, செங்கல்பட்டில் வீடு, மனைவி பெயரில் தஞ்சாவூரில் 3.5 ஏக்கர் விவசாய நிலம். 10 சவரன் நகை, மனைவி பெயரில் 90 சவரன் நகை, ஐந்து கிலோ வெள்ளி. வீட்டுக்கடன் உண்டு.


நீதிபதி சந்துரு: சென்னை மயிலாப்பூரில்12.5 லட்சம் மதிப்பில் இரண்டு படுக்கையறை வீடு, மனைவி பெயரில் அபிராமபுரத்தில் 33 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று படுக்கையறை வீடு. விவசாய நிலங்கள் இல்லை. கனரா வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளில் 38.38 லட்சம் ரூபாய் சேமிப்பு. சகோதரர் மற்றும் மைத்துனரிடம் வாங்கிய கடன் ரூ.31.20 லட்சம். மனைவிக்கு ஆயிரம் கிராம் தங்கநகைகள், 12 கிலோ வெள்ளி.

நீதிபதி ராமசுப்ரமணியன்: சேமிப்பு, இன்சூரன்ஸ், மனைவி பெயரில் மாருதி கார் மற்றும் 40 சவரன் நகை, வைரக் கம்மல், வைர மூக்குத்தி, மகளுக்கு 30 சவரன் நகை.



நீதிபதி மணிக்குமார்: மனைவிக்கு 115 சவரன் நகை, 4.15 கிலோ வெள்ளி. ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பழைய மோட்டார் சைக்கிள்.

நீதிபதி ஏ.செல்வம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு வீடுகள், 2.36 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு, மனைவி பெயரில் ஐந்து சவரன் நகை. 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன்.


நீதிபதி சிவகுமார்: சிவகங்கை மாவட்டத்தில் வீடு, 11 ஏக்கர் விவசாய நிலம், 19 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 30 சவரன் நகை, மனைவி பெயரில் 50 சவரன் நகை. டொயோட்டா குவாலிஸ் கார்.


நீதிபதி ராஜசூர்யா: மனைவி பெயரில் புதுச்சேரியில் இருவீடுகள்; ஏழு லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 50 சவரன் நகை. சான்ட்ரோ கார், பஜாஜ் மோட்டார் சைக்கிள்.


நீதிபதி சுதந்திரம்: சென்னையில் இரு வீடுகள். ரூ.2.32 லட்சம் வங்கி சேமிப்பு. மனைவிக்கு 300 சவரன் நகைகள், 12 கிலோ வெள்ளி, டாடா இண்டிகா கார்.


நீதிபதி நாகமுத்து: தஞ்சாவூரில் வீடு, குடும்ப விவசாய நிலம் 1.98 எக்டேர். 4.61 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 25 சவரன் நகைகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 175 சவரன் நகைகள்; ஐந்து கிலோ வெள்ளி. மாருதி கார், ஹுண்டாய் கார், மனைவிக்கு ஹுண்டாய் கார்.



நீதிபதி சசிதரன்: வங்கி சேமிப்பு 1.57 லட்சம் ரூபாய். 32 கிராம் நகைகள், மனைவிக்கு 1,200 கிராம் நகைகள், 40 காரட் வைரம். டாடா இண்டிகா கார், பஜாஜ் ஸ்கூட்டர்.

நீதிபதி பெரியகருப்பையா:
சென்னை, மதுரையில் வீடுகள்; தேனி மாவட்டத்தில் விவசாய நிலம் (குடும்பச் சொத்து). 6.80 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 20 சவரன் நகைகள், மனைவிக்கு 100 சவரன், மாருதி ஆம்னி வேன், பஜாஜ் ஸ்கூட்டர். மகனுக்கு 15 லட்சம் ரூபாய் கல்விக் கடன்.


நீதிபதி ராமநாதன்: 10 சவரன் நகை, மனைவி பெயரில் 100 சவரன் நகை, 30 காரட் வைரம், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில் டாடா இண்டிகா கார். கொடைக்கானலில் வீடு கட்ட 12 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்.


நீதிபதி ராஜஇளங்கோ: வங்கி சேமிப்பு 8.4 லட்சம் ரூபாய். வீடு, விவசாய நிலங்கள் உள்ளன. மனைவிக்கு 1,200 கிராம் தங்க நகைகள், 10.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா கார். ரூ.2.5 லட்சம் வங்கிக் கடன், ரூ.35 லட்சம் வீட்டுக் கடன்.


நீதிபதி மாலா: மதுரையில் காலி மனைகள். விவசாய நிலங்கள் இல்லை. 75 சவரன் நகைகள், ஏழு கிலோ வெள்ளி. கடன் பாக்கி 11 ஆயிரத்து 700 ரூபாய்.

நீதிபதி அருணா ஜெகதீசன்: சென்னையில் இரு வீடுகள், விவசாய நிலங்கள் இல்லை. 2.84 லட்சம் ரூபாய் வங்கி சேமிப்பு. 75 சவரன் நகைகள், ஐந்து கிலோ வெள்ளி. கணவருடன் சேர்ந்து வீட்டு மனைக் கடன் 25 லட்சம் ரூபாய். இவ்வாறு இணையதளத்தில் விவரங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

வீடு, வாகனம் வாங்கிய கடனும் உண்டு: தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள நிலம் மற்றும் இடங்களை, நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர். அதற்கான இன்றைய சந்தை மதிப்பு தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழக நீதிபதிகள் சொத்து விவரப்பட்டியல் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.பல நீதிபதிகள் சொத்து வாங்குவதற்கு, ஆறாவது சம்பளக் கமிஷன் உயர்வும், அதன் நிலுவைத் தொகையும் உதவியாக இருந்துள்ளது.



நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, அக்பர் அலி, சித்ரா வெங்கட்ராமன், சொக்கலிங்கம், சிரில் தாமரைச் செல்வம், தனபாலன், தர்மாராவ் ஆகியோருக்கு வீடு, வாகனம் வாங்கிய வகையில் கடன் இருக்கிறது.தலைமை நீதிபதி ஹேமந்த் லக்ஷ்மண் கோகலே பெயரில் வீடு, விளைநிலம், வைப்பு நிதி, இன்சூரன்ஸ், நகை, வாகனம் எதுவுமே இல்லை. கடனும் இல்லை. பரம்பரையாக வந்த நிறுவனப் பங்குகளும், 38 லட்சம் ரூபாய் வங்கியிருப்பும் உள்ளது.நீதிபதி தர்மாராவ், பெரும்பாலான சொத்துக்களை ஆந்திராவில் தான் வைத்துள்ளார்.


நீதிபதிகள் அக்பர் அலி சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் வீடுகள் வைத்துள்ளார்.தலைமை நீதிபதி கோகலே, தன் மனைவி பெயரிலான சொத்துக்களையும், நீதிபதி அருணா ஜெகதீசன், தன் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களையும் தனியாக பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர்.நீதிபதி பானுமதி, கைக்கடனாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்

இந்த சொத்து விவரங்களை,www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.





























































































உத்தமபாளையம் கருவூலத்தில் ரெய்டு


உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஊழியர்கள், லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.நேற்று மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் கலசலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் சோதனை நடத்தினர்.

தினகர்சாமி டி.எஸ்.பி., கூறுகையில், "பணியாளர்கள் முறைகேடு செய்துள்ளனரா, வழங்கப்பட வேண்டிய சம்பள பில்கள் லஞ்சத்தை எதிர்பார்த்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு நடந்தது. பென்ஷன்தாரருக்கு வழங்க வேண்டிய பில் நிலுவையில் இருந்தது. கணக்கிற்கு மேல் 450 ரூபாய் கூடுதலாக இருந்தது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

திருச்சி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு


திருச்சி, பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி , சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், திருச்சியில் மூவரைப் பிடித்து போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.திருச்சி கோட்டை பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீஸ் குழுவினர் அதிரடியாக நேற்று மாலை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் பணத்தை ஜன்னல் வழியே தூக்கி எறிந்துள்ளனர்.இதில், பத்திர எழுத்தர் தினகரன், அலுவலக உதவியாளர் குருமூர்த்தி, துப்புரவு பணியாளர் சண்முகநாதன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தனர். சரியான தகவல் கூறாததால், அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதே போல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் இரண்டில், நேற்று மாலை 4.25 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ரெங்கராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனி தாசில்தார் மோகன், உதவியாளர் ஞானசூரியன், ஏட்டுகள் கந்தப்பன், செல்வராஜ், செல்வம், ராஜமாணிக்கம், ராமச்சந்திரன் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இரவு 7 மணிக்கு மேலும் தொடர்ந்து சோதனையில் பதிவுறு எழுத்தர் குலோத்துங்கனிடம் 2,000 ரூபாய், அலுவலக உதவியாளர் உலகநாதனிடம் 560 ரூபாய், எழுத்தர் நாடிமுத்துவிடம் 800 ரூபாய், ஓய்வு பெற்ற எழுத்தர் சவுந்தரபாண்டியனிடம் 2, 400 ரூபாய், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீமிடம் பத்தாயிரத்து 430 என 16 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இந்த தொகைகளுக்கு அவர்கள் உரிய விபரம் கூறினால் பிரச்னைகளில் இருந்து தப்பலாம். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், பல பதிவு ஆவணங்களை எடுத்து விசாரித்து வருகின்றனர்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை அஞ்சனகுமார் என்பவர் சார் பதிவாளராக பணி செய்தார். இவர் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கந்தசாமி என்பவர் புதிய சார் பதிவாளராக பொறுப்பேற்றார்.இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரைவேல் மற்றும் குழுவினர் இந்த அலுவலகத்துக்குள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக கதவுகளை மூடிவிட்டு ஒவ்வொரு அலுவலர்களிடமும் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் கிடைத்த பணம் குறித்த விவரம் தெரியவில்லை.







19 நவம்பர் 2009

மது கோடாவின் சொத்து ஒரு கோடி ரூபாய் தானாம் !




பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மதுகோடா, தனது தேர்தல் மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளபடி அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று இப்போது தெரியவந்துள்ளது.இரும்புச் சுரங்கத்தில் தினக்கூலியாக வாழ்வை ஆரம்பித்த மதுகோடா, படிப்படியாக வளர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரானார்.



2005
ல் ஜகன்னாத்பூர் தொகுதியிலும், 2009ல் சிங்பும் தொகுதியிலும் போட்டியிட்டவர். இப்போது அவர் சிங்பும் தொகுதியின் எம்.பி.,இரு தேர்தல்களிலும் மதுகோடா மனு தாக்கல் செய்துள்ளார். அவற்றில் தனது சொத்து மதிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை பற்றிய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும் கையிருப்பு என்று 2005ல் குறிப்பிட்டுள்ளார்.



2009
ல் அவரது கையிருப்பு 13.6 லட்ச ரூபாய். 2005ல் அலகாபாத் வங்கியில் மட்டும் பங்கு வைத்திருந்தார். 2009ல் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பாரத ஸ்டேட் வங்கியில் பங்கு வைத்துள்ளார்.ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்புடைய நகைகள் 2005ல்; 2009ல் அவற்றின் மதிப்பு 37 லட்ச ரூபாய். ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய விவசாய நிலம் 2005ல்; நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் இப்போதுஇன்றைய நிலையில் அவரது அசையாச் சொத்துக்களின் மதிப்பு நான்கு லட்ச ரூபாய். அசையும் சொத்துக்களின் மதிப்பு 94 லட்ச ரூபாய்.சொத்துக்களில் பெரும்பாலானவை அவர் பெயரில் தான் இருக்கின்றன. நகைகள், நிலம் போன்றவை அவர் மனைவி கீதா பெயரில் உள்ளன.இப்போது, 4,000 கோடி ரூபாய் ஊழல் விஷயமாக மதுகோடாவிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்றுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நால்வர் கைது .


திருப்பூர் : போலி ஆவணம் தாக்கல் செய்து, ஏற்றுமதி ஊக்கத் தொகை (டிராபேக்) திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூர் தொழிலதிபர்கள் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ.,கைது செய்தது. திருப்பூர் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் ராம்சேனாதிபதி(35). கோவைப்புதூரைச் சேர்ந்த நண்பர் குருபகதூர்(39) என்பவருடன் சேர்ந்து திருப்பூரில் வெல்நோன் எக்ஸ்போர்ட் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை 1991 முதல் நடத்துகிறார்.

கடந்த 2002 - 2003ம் ஆண்டில் இந்நிறுவனம் தயாரித்த ஆடைகள் அதிகளவில் ரஷ்யா, பனாமா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், இந்நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஊக்கத்தொகை பெற்றது. இதில், சந்தேகம் ஏற்பட்டதால் மத்திய சுங்கத்துறை சார்பில், சி.பி.ஐ.,ல் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ.,சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டதில், போலி ஆவணம் தயாரித்து, 3.6 கோடி ரூபாய் டிராபேக் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இம்மோசடி தொடர்பாக, எக்ஸ்போர்ட் கம்பெனி நிர்வாகிகள் ராம்சேனாதிபதி, குருபகதூர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி(32), சென்னை,கொளத்தூரைச் சேர்ந்த குருநாதன்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று, கோவை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரையும் வரும் டிச.,2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

18 நவம்பர் 2009

ரூ 500 லஞ்சம் : செக்கானூரணி சார்பதிவாளர் எழுத்தர் கிரிதரன் கைது


பத்திர நகல் வழங்க, லஞ்சம் வாங்கிய மதுரை மாவட்டம் செக்கானூரணி சார்பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் கிரிதரன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே, நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களது பெயரில், மூன்று இடங்களில் நிலங்கள் உள்ளன.

இவர்களது மகன்கள் பாண்டி(35), மகேஷ் பாண்டி. இருவரும் பெற்றோர் பெயரில் உள்ள நிலங்களை, பாகப்பிரிவினை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலங்களுக்கான ஒரிஜினல் பத்திரங்கள், பாண்டியம்மாளிடம் உள்ளது. நிலங்களின் விவரம் தெரிந்து கொள்ள விரும்பிய பாண்டி, நகல் பத்திரங்கள் வழங்குமாறு, நவ.11ல் செக்கானூரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் கேட்டார்.

தலைமை எழுத்தர் கிரிதரன், மூன்று நிலங்களின் பத்திர நகல்களுக்கு கட்டணம் 200 ரூபாய்; லஞ்சமாக 700 ரூபாய் சேர்த்து, 900 ரூபாய் கொடுத்தால் தான், நகல்களை தரமுடியும் என்றார். அலுவலகத்திற்கு, 16ம் தேதி சென்ற பாண்டி, நகல் கட்டணம் 200 ரூபாயும், லஞ்சம் 200 ரூபாயும் தருவதாக கூறினார். அதற்கு கிரிதரன் மறுத்து விட்டார்.

பாண்டி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய 700 ரூபாயும், பவுடர் தடவாத 200 ரூபாயும் பாண்டியிடம் கொடுத்தனுப்பினர். பணத்தை பெற்றுக்கொண்ட கிரிதரன், லஞ்சமாக 500 ரூபாய் போதும் என்று கூறி, 200 ரூபாயை திருப்பி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிரிதரனை கைது செய்தனர்.

சுனா‌மி ‌நி‌தி‌யி‌ல் மோசடி: தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை ‌மீது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு


சுனா‌மி ‌நி‌தி‌யி‌ல் தெ‌ன்ன‌ி‌ந்‌திய ‌‌திரு‌ச்சபை மோசடி செ‌ய்து‌ள்ளதா‌ல் தா‌ங்க‌ள் அ‌ளி‌த்த சுனா‌மி ‌நி‌தியை வ‌ட்டி‌யுட‌ன் ‌திரு‌ப்‌பி‌த் தர உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி ‌நியூயா‌ர்‌க்கை சே‌ர்‌ந்த தொ‌ண்டு ‌நிறுவன‌ம் ஒ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

நியூயா‌ர்‌க்கை சே‌ர்‌ந்த தொ‌ண்டு ‌‌நிறுவன‌ம் ஒ‌ன்‌றி‌ன் அ‌திகா‌ரி ராப‌ர்‌ட் ராடெ‌க்‌ஸ் எ‌ன்பவ‌ர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ல் சுனா‌மி பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டபோது சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌ம‌க்களு‌க்கு உதவுவத‌ற்காக எ‌ங்களுடைய அமை‌ப்பு ‌நி‌தி ‌‌திர‌ட்டியது.

18 கோடியே 27 ல‌ட்ச ரூபா‌ய் ‌நி‌தியை சுனா‌மியா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு உதவுவத‌ற்காக செ‌ன்னை ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு 2005ஆ‌ம் ஆ‌ண்டு வழ‌ங்‌கினோ‌ம். ஆனா‌ல் ‌சி.எ‌ஸ்.ஐ. அமை‌ப்பு இதனை முறையாக பய‌ன்படு‌த்த‌வி‌ல்லை.

இ‌தி‌ல் முறைகேடு நட‌ந்து‌ள்ளதாக எ‌ங்களு‌க்கு தகவ‌ல் வ‌ந்து‌ள்ளது. மேலு‌ம் ‌நி‌தி செல‌வி‌ட்டத‌‌ற்கு கண‌க்கு கே‌ட்டபோது அவ‌ர்க‌ள் கண‌க்கு கொடு‌க்க‌வி‌ல்லை. இது கு‌றி‌த்து செ‌ன்னை ‌சி.‌பி.‌சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌த்தோ‌ம்.

சி.‌பி.‌சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டன‌ர். இது தொ‌ட‌ர்பாக ராப‌ர்‌ட் சு‌னி‌ல், பெ‌னிடிகா ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி ஆ‌கிய இர‌ண்டு பே‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

சுனா‌மி ‌நி‌தி‌‌யி‌ல் மோசடி செ‌ய்து‌ள்ளதா‌ல் நா‌ங்க‌ள் அ‌ளி‌த்த ‌நி‌தியை 24 சத‌வீத வ‌ட்டியுட‌ன் சே‌ர்‌‌த்து ‌திரு‌ப்‌பி அ‌ளி‌க்க தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு உ‌த்தர‌வி‌ட வே‌‌ண்டு‌ம்'' எ‌ன்று மனு‌வி‌‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ராஜசூ‌ர்யா, இது கு‌றி‌த்து ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம்படி தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு‌ச்சபை‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

ரூ.2000 லஞ்சம் வாங்கிய வழக்கு : வி.ஏ.ஓ., ராஜாவுக்கு 2 ஆண்டு சிறை


மதுரை அழகர்கோவிலில் இருக்கும் சிறுதூர் வி..., ராஜா. இவர் கடந்த 2003ம் ஆண்டு மாரியப்பன் என்பவரிடம் இருந்து பட்டா மாற்றம் செய்து தர ரூ.2000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.

இந்நிலையில் இந்த வழக்கு ஜெ.எம். 1 கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அலமேலு, குற்றவாளி ராஜாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.