புதியவை :

Grab the widget  Tech Dreams

09 டிசம்பர் 2009

ரூ.10 ஆயிரம் லஞ்சம் : துணை நில ஆய்வாளர் கைது


சென்னை : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை நில ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகர்(42). பி.எஸ்.என்.எல்.,லில் பணிபுரிந்து வருகிறார். குடியிருக்கும் வீட்டிற்கு, சொந்த பெயரில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக, தாம்பரம் நத்தம் நில வரித்திட்டம், துணை நில ஆய்வாளர் கபிலனை(52) அணுகினார். பட்டா வழங்குவதற்கு கபிலன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் நேற்றும், மீதி 40 ஆயிரம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை அன்றும் தரும்படி தனசேகரிடம் கூறினார். இதுகுறித்து தனசேகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை நகர் பிரிவு-1 டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமிகாந்தன் ஆகியோர் நேற்று காலை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்

தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடைக்கு தனசேகரை வரவைத்த கபிலன், லஞ்சப் பணம் 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கபிலனை கையும், களவுமாக கைது செய்தனர். கபிலனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கபிலனின் பாக்கெட்டில் இருந்த 26 ஆயிரத்து 800 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், கபிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக