புதியவை :

Grab the widget  Tech Dreams

09 டிசம்பர் 2009

ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது

ஸ்ரீபெரும்புதூர்,டிச,9. மின் இணைப்பு வழங்க ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி இவர் அதே பகுதியில் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தண்டலம் கிராமத்தில் உள்ள மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலம் மின் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கடேசன் ரூ.3000 பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சுப்ரமணி இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து புதன்கிழமை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சுப்ரமணியை ரூ 3000 பணத்தை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியிடம் இருந்து வெங்கடேசன் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் வெங்கடேசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக