புதியவை :

Grab the widget  Tech Dreams

24 டிசம்பர் 2009

ஊழல் பணத்தால் திமுக வெற்றி: விஜயகாந்த்


ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது.​

திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது.​ எந்த ஊழலை ஒழிக்க பாடுபடுகிறோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.​ தாற்காலிகமான இந்த வெற்றி திமுகவினருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.​ ஆனால் எதிர்காலத்தில் இது அவர்களுக்கே ஆபத்தாகிவிடும்.​ "வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பாடம் நாளை திமுகவுக்கு கிடைக்கும்.​

வெற்றி,​​ தோல்வி சகஜம் என்று வேதாந்தம் பேசி பயனில்லை.​ இந்தத் தோல்வி ஏழைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.​ இதனால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்.​ எனவே தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.​ இந்த தர்ம யுத்தத்தில் எதிர்பாராமல் தேமுதிக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.​ கொட்டிய பண மழையிலும் நேர்மையாக நமக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.​

தமிழகத்தில் நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்பதை ஏற்று வாக்களித்த இந்த நல்லோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆட்டிப்படைக்கும் அதிகார சூழ்நிலையிலும் தேர்தல் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகளுக்கு என் இதயத்தில் என்றும் நீங்காத இடம் உண்டு.

வாக்காளர்களுக்கு தாராளமாக லஞ்சம் கொடுத்ததை பத்திரிகைகளும்,​​ தேர்தல் பார்வையாளர்களும் நன்கறிவார்கள்.​ நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.​ எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.​ அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக