புதியவை :

Grab the widget  Tech Dreams

22 டிசம்பர் 2009

1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொய்யாமணி(கரூர் ) வி.ஏ.ஓ . நடராஜன் கைது .

குளித்தலை:கரூர் அருகே, லஞ்சம் வாங்கியதற்காக வி.ஏ.ஓ.,வை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் கோரப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை(50) என்பவர், கடந்த 18ம் தேதி, தனது நிலத்தின் பட்டா சிட்டா நகல் கேட்டு, பொய்யாமணியிலுள்ள வி.ஏ.ஓ., நடராஜனிடம்(52) மனு அளித்தார். நகலை 22ம் தேதி வாங்கி கொள்ளும்படியும், அதற்கு 1,000 ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியதையடுத்து, நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சின்னதுரை, புகார் கொடுத்தார்.வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நேற்று காலை 11.50 மணிக்கு சென்ற அவர், ரசாயனம் தடவிய ரூபாயை வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். அதை வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடமிருந்து கணக்கில் வராது வைத்திருந்த 8,350 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.கைதான வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலராகவும் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக