புதியவை :

Grab the widget  Tech Dreams

25 டிசம்பர் 2009

பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து, விவசாயி. இவர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய உதவி அலுவலர் ஜேம்ஸ் (வயது57) என்பவரை அணுகினார்.
இத்திட்டத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தில் கையெழுத்திட ரூ.200 தந்தால்தான் கையெழுத்திடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.
இது குறித்து காளிமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசின் அறிவுரையின்படி நேற்று மாலை 6 மணி அளவில் அதிகாரி ஜேம்ஸ் வீட்டிற்கு விவசாயி காளிமுத்து சென்று அவரிடம் ரூ.200-ஐ கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. குமாரசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா ஆகியோர் கையும், களவுமாக ஜேம்சை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் வேளாண்மை அலுவலக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக