புதியவை :

Grab the widget  Tech Dreams

10 டிசம்பர் 2009

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர் மீது புகார்: டீன் விசாரணை

தமிழகத்தில் 2-வது பெரிய ஆஸ்பத்திரியாக திகழ்வது மதுரை அரசு ஆஸ்பத்திரியாகும். தென் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
இங்கு வரும் நோயாளிகளிடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக அடிக்கடி புகார் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர், திடீர் என சென்று சோதனையிட்டு சிலரை பிடித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் லஞ்சம் வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது அரசு ஆஸ் பத்திரியிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. இங்கு பாலமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இவரது இறப்பு சான்றிதழ் கோரி அவரது உறவினர் பாலமுருகன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். சான்றிதழுக்கு ரு.150 தந்தால்தான் கொடுக்க முடியும் என சில ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாலமுருகன் போலீசிலும், அரசு ஆஸ்பத்திரி டீன்னிடமும் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் டீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக