புதியவை :

Grab the widget  Tech Dreams

21 நவம்பர் 2009

உத்தமபாளையம் கருவூலத்தில் ரெய்டு


உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஊழியர்கள், லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.நேற்று மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் கலசலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் சோதனை நடத்தினர்.

தினகர்சாமி டி.எஸ்.பி., கூறுகையில், "பணியாளர்கள் முறைகேடு செய்துள்ளனரா, வழங்கப்பட வேண்டிய சம்பள பில்கள் லஞ்சத்தை எதிர்பார்த்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு நடந்தது. பென்ஷன்தாரருக்கு வழங்க வேண்டிய பில் நிலுவையில் இருந்தது. கணக்கிற்கு மேல் 450 ரூபாய் கூடுதலாக இருந்தது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக