புதியவை :

Grab the widget  Tech Dreams

17 நவம்பர் 2009

ரூ.200 லஞ்சம் அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்த சரஸ்வதிக்கு 3 ஆண்டு சிறை


அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 200 ரூபாய் பெறுவதற்காக, கடந்த 2003 செப்.15ம் தேதி நகராட்சியில் விண்ணப்பித்தார்.

அப்போது அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர் சரஸ்வதி. இவர் ஆறுமுகத்தின் விண்ணப்பத்தை, கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆறுமுகம் இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். 2003 செப்.23 ல் மாலை 5மணிக்கு ஆறுமுகம் சரஸ்வதியிடம் 200 ரூபாயை கொடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய சரஸ்வதிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக