
நீலகிரியில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு லஞ்ச, ஊழலே காரணம் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. சுமார் 1,400 ஏக்கர் விளைபயிர் சேதமடைந்துள்ளது. காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் கற்பாறைகளை உடைத்தும் கண்ட இடங்களில் எல்லாம் சட்டத்துக்குப் புறம்பாக குடியிருப்புக்கள் அமையக் காரணம் அரசியல்வாதிகளிடமும் , அரசாங்க அதிகாரிகளிடமும் தாண்டவமாடும் லஞ்ச, ஊழல் தான் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக