புதியவை :

Grab the widget  Tech Dreams

11 நவம்பர் 2009

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடி



சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றைய பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 21 இளைஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ராஜகீழ்ப்பாக்கம் ராகவா கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத்(35); விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தங்கை ஆஸ்திரேலியாவில் இந்தியன் ரெஸ்டாரன்ட்டை நடத்தி வருவதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்வதாகவும் கூறினார்.

தேர்வானவர்கள் மூன்று மாதத்தில் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறினார். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.இதை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த 21 பேர், 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மூன்று மாதம் கழித்து கேட்டதற்கு உங்களுடைய பெயர் லிஸ்ட்டில் வரும் வரை காத்திருங்கள் என கூறினார்.
ஆறு மாதங்கள் கழித்து கேட்டதற்கு,"எனக்கு போன் செய்தால் போதும்' என, கூறினார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாங்கள், பணத்தை திரும்ப தரும்படி கேட்டோம். கடந்த 3ம் தேதி பணத்தை திரும்பத் தருவதாகக் கூறினார். பின்னர் அவர் கொடுத்த மொபைல் போனை தொடர்பு கொண்டால் "ஸ்விட்ச் ஆப்' என, வருகிறது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரை பெற்ற புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விட்டார்.


மறக்காமல் வாக்களித்து ஆதரவு<br />தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக