புதியவை :

Grab the widget  Tech Dreams

27 நவம்பர் 2009

காஞ்சீபுரத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கைது

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (27) இவர் காஞ்சீபுரம் நகர போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். நேற்று இரவு இவர் மூங்கில் மண்டபம் சந்திப்பில் பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த காஞ்சீபுரம் தேவி நகர் பகுதியை சேர்ந்த சவுரிராஜன் என்பவ ரின் மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் விசா ரணை செய்தார்.
அப்போது அவர் வேலை பார்க்கும் அடையாள அட்டையை பறித்து வைத்து கொண்டு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடு இல்லை என்றால் உன்மீது பல வழக்குகளை போட்டு விடுவேன் என்று மிரட்டினார். அவர் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி சென்ற சவுரிராஜன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. விஜயராகவனிடம் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக