
இதயம் இல்லாத மனிதன். ஊனமுற்றவர்களிடம் லஞ்சமா! கேட்கவே வெட்கமாக உள்ளது
செங்கம் தாலுக்கா ரோடு கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (29). விபத்தில் சிக்கி கை ஊனமாகி எந்த வேலையும் செய்யாமல் பெற்றோர் பராமரிப்பில் இருந்தார். சவுண்ட்சர்வீஸ் வைப்பதற்காக தாட்கோ மூலம் ரூ.50 ஆயிரம் கடன்கேட்டு அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதந்துள்ளார்.
மனு சரியாக இருப்பதாகவும் உடன் கையெழுத்து இட்டு அனுப்புமாறு செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிதிராவிடர் நலம்) அண்ணாமலை என்பவர் மணிவேல்யிடம் ரூ.400 லஞ்சம் கேட்டு ஒருமாதமாக அலைகழித்துள்ளார்.
என்னிடம் பணமில்லை நான் ஊனமானவன். பெற்றோர் பராமரிப்பில் உள்ளேன் என மணிவேல் கூறியும் கையெழுத்து போட அண்ணாமலை மறுத்து விட்டாராம்.
இது குறித்து மணிவேல் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. ராமேஸ்வரி இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், வேலு மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை மணிவேலிடம் தந்தனர். அந்த பணத்தை லஞ்சமாக அண்ணாமலை வாங்கிக்கொண்டு கையெழுத்து போடும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலையை கைது செய்தனர்.
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து ஆதரவு
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக