புதியவை :

Grab the widget  Tech Dreams

28 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அதிகாரி “சஸ்பெண்டு” விருதுநகர் கலெக்டர் அதிரடி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டியபட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் வேலு. இவரிடம் அதே ஊரை சேர்ந்த காளியம்மாள் என்ற பெண் பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பம் அளித்திருந்தார். அதற்கான சான்றிதழ் வழங்குவதற்கு காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்று உள்ளார்.
இது குறித்து காளியம் மாள் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்யனிடம் நேரடியாக சென்று புகார் மனு அளித்தார். அதன் பேரில் கலெக்டர் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையா என்பதை அறிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காளியம்மாளிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலு லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து வேலுவை சஸ்பெண்டு செய்து கலெக்டர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை கிராம நிர்வாக அதிகாரிகளை பீதி அடைய செய்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக