புதியவை :

Grab the widget  Tech Dreams

21 நவம்பர் 2009

சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி: ஒருவர் கைது


சைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவருக்கு சைப்ரஸ் அல்லது பிஜூ தீவில் வேலை வாங்கித்தருவதாக, கரூர், ஈசா நத்தம் பகுதியைச் சேர்ந்த மருதப்ப கவுண்டர் மகன் சரவணவேலு கூறியுள்ளார். இதற்காக, 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை சரவணவேலுவிடம் மணிகண்டன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சரவணவேலு, வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூரை சேர்ந்த சரவண வேலுவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக