புதியவை :

Grab the widget  Tech Dreams

13 நவம்பர் 2009

லஞ்சவழக்கில் தன்டனை பெற்று தலைமறைவான வி.ஏ.ஒ., சரண்


ராமநாதபுரம்:லஞ்ச வழக்கில் தலைமறைவான முன்னாள் வி.ஏ.ஒ., ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் குருப் வி.ஏ.ஒ.,வாக பணிபுரிந்தவர் நாகலிங்கம்(50) இவர் 1998ல் மேல வலசையை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். சரவணன் புகாரின் படி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் 5.8.1998ல் கைது செய்யப்பட்டார். இதன் வழக்கு ராமநாதபுரம் சி.ஜே. எம். கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணை செய்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ.,க்கு ஒராண்டு சிறை தண்டனை, 4000 ரூபாய் அபராதம் விதித்து 27.8.2003ல் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து வி.ஏ.ஒ., பணிநீக்கம் செய்யப் பட் டார்.கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார்.இதன் மனு 30.6.2009ல் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டு, கீழ் கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதன்பின் நாகலிங்கம் தலைமறைவானார். இவர் மீது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் தலைமறைவான நாகலிங்கம் ராமநாதபுரம் சி.ஜே.எம். கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கோர்ட் உத்தரவுப் படி போலீசார் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக