புதியவை :

Grab the widget  Tech Dreams

16 நவம்பர் 2009

ஊசி போட பணம் வசூல் : திண்டுக்கல் தலைமை ஆஸ்பத்திரி ஊழியர்கள் 21 பேர் மீது நடவடிக்கை


திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அடிப்படை பணியாளர்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள், அடிப்படை பணியாளர்கள் 21 பேர் மீது வார்டுகளில் தங்கியிருக்கும் நோயாளிகளிடம், ஆபரேஷன், பிரசவ வார்டுகளுக்கு வருபவர்களிடமும், ஊசி போடவும், மருந்து வாங்கவும் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 2004ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கினை பதிவு செய்தனர்.


இது தொடர்பாக நடந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. புகாருக்கு உள்ளான 21 பேரும் தவறு செய்துள்ளதாகவும், இவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதன்படி மூன்று பேர் சஸ்பெண்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக