புதியவை :

Grab the widget  Tech Dreams

30 நவம்பர் 2009

ரூ.4 ஆயிரம் கோடி ஊழல்: மதுகோடா “திடீர்” கைது

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா ஊழல் செய்து ரூ.4 ஆயிரம் கோடி சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் லஞ்சம் வாங்கியும், ஹவாலா மூலம் பணம் பரிமாற்றம் செய்தும் இவ்வளவு சொத்துக்களை சேர்த்து இருந்தார்.
இது தொடர்பாக அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மதுகோடா வீடு மற்றும் அவருடைய நிறுவனங்களில் அதிரடி சோதனையும் நடத்தினார்கள்.
மதுகோடாவிடமும் நேரடியாக விசாரணை நடந்தது. இதில் அவர் ஊழல் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடந்ததால் அவர் கைதாவது தள்ளி போனது.
மதுகோடா என்னை தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் வருமானவரி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று புகார் கூறினார். எனவே அவரை கைது செய்யாமல் இருந்தனர்.
இப்போது முதல் கட்ட தேர்தல் முடிந்து விட்டதுடன் 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிந்து விட்டதால் மதுகோடாவை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று திடீரென கைது செய்தனர்.
கைபேசா என்ற இடத்தில் தங்கியிருந்த அவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இது பற்றி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “மது கோடாவை விசாரணைக்கு வரும்படி 2-வது முறையாக வாரண்டு அனுப்பியும் வரவில்லை. எனவே அவரை கைது செய்தோம்” என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக