புதியவை :

Grab the widget  Tech Dreams

21 ஜூலை 2010

பிரசவத்துக்கு லஞ்சம் ஜி.எச் ஊழியர்களிடம் அதிகாரி விசாரணை


கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று திடீர் முற்றுகையிட்டு, பிரசவ வார்டில் லஞ்சம் வசூலிப்பது குறித்து கண்காணிப்பாளர் மதிவாணனிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500, பெண் குழந்தை பிறந்தால் ரூ.100 முதல் 200 வரை லஞ்சமாக தர வேண்டும் என அங்கு பணியில் இருக்கும் பணியாளர்கள், நர்ஸ்கள் மிரட்டுகின்றனர். லஞ்சம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கண்காணிப்பாளர் மதிவாணன், ஆர்.எம்.ஓ. சிவப்பிரகாசம் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் சடகோபன் பிரசவ வார்டில் பணியாற்றும் பணியாளர்கள், நர்ஸ்களிடம் விசாரணை நடத்தினார்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களிடமும் விசாரணை நடந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக