புதியவை :

Grab the widget  Tech Dreams

11 ஜூலை 2010

போலீஸ் ஸ்டேஷன் போனால் கக்கூஸ் கழுவ வேண்டும் !


போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு கொடுமை.

ஆத்தூர்: தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.

ஆத்தூர் அருகே தலைவாசல் தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் பெரியம்மாள். கூலித்தொழிலாளி. அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அதில் அவர் தாக்கப்பட்டார்.

இது குறித்து தலைவாசல் போலீஸில் புகார் தெரிவிக்க பெரியம்மாள் சென்றார். பணியில் இருந்த எஸ்.ஐ., சாந்தாவிடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.ஐ., கழிப்பறை, குளியல் அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார்.பெரியம்மாள் வேறுவழியில்லாமல், எல்லா இடங்களையும் சுத்தம் செய்தார். இதைப் பார்த்த புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


மனித உரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டு உள்ளது என தெரியவில்லை !

------------------------------------------------------------------------------------------------------

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37939

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக