புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜூலை 2010

லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்


பதிவு செய்த "வீடியோ'வை காணhttp://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32




திருப்பூர் : திருப்பூரில் லஞ்சப்புகார் சுமத்தப் பட்ட, பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி பிறப்பித்துள்ளார்.

உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி. இவர், திருப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த 23ம் தேதி மதியம், கரட்டாங்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

அதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட ஆறு பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், லஞ்சம் பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் வெளியானது. அதில், எலக்ட் ரிக்கல் கடைக்கு வந்த இந்திராணி, சுப்ரமணியத்துடன் பேசும் உரையாடல் இடம்பெற்றிருந்தது. மன்னிப்பு கேட்பது, கண்ணீர் சிந்தி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, லஞ்சப்புகார் இன்ஸ்பெக்டர் இந்திராணியை சஸ்பெண்ட் செய்து, கோவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்றிரவு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக