புதியவை :

Grab the widget  Tech Dreams

02 பிப்ரவரி 2010

லஞ்ச புகார்:​ பாப்பாக்குடி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு


பாப்பாக்குடி இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெறுவதாக வந்த புகார்களையடுத்து,​​ அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.​ பெ.​ கண்ணப்பன் உத்தரவிட்டார்.​ ​

திருநெல்வேலி மாவட்டம்,​​ பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுந்தரமகாலிங்கம் ​(54).​ ​ ​ ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த நிலத் தரகர் சுப்பிரமணியனுக்கும்,​​ பாளையங்கோட்டையைச் சேர்ந்த நிலத் தரகர் மனோகருக்கும் இடையே தொழில்ரீதியாக முன்பகை இருந்தது.​ ​

இதனிடையே,​​ சுப்பிரமணியன் கடந்த 1}8}2006 ஆம் தேதி பாப்பாக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,​​ மனோகர் மீது இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குத் தொடர்ந்தார்.​ ​

இதனால்,​​ அதிர்ச்சியடைந்த மனோகர்,​​ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தன் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும்,​​ அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.​ மனுவை விசாரித்த நீதிமன்றம்,​​ திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.​ ​ அந்த உத்தரவின் அடிப்படையில் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜரானார்.​

மனோகரன் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி.க்கு,​​ நீதிமன்றம் உத்தரவிட்டது.​ அதன்பேரில் ஆஸ்ராகர்க் விசாரணை செய்தார்.​ ​ விசாரணையில்,​​ இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம்,​​ அவ் வழக்கின் புகார்தாரர் சுப்பிரமணியத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பொய் வழக்குபதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.​ ​

உடனே டி.ஐ.ஜி.​ பெ.​ கண்ணப்பன்,​​ இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்தை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.​ மேலும்,​​ சுந்தரமகாலிங்கம் பணியாற்றிய இடங்களில் அவர் மீதான முறைகேடுகள் குறித்து ஆஸ்ராகர்க் விசாரணை மேற்கொண்டார்.​ ​ இதில் சுந்தரமகாலிங்கம் 2003 ஆம் ஆண்டில்,​​ சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது,​​ ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலிருந்தது கண்டறியப்பட்டது.​

இதையடுத்து,​​ பணியிடை நீக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்துக்கு கட்டாய ஓய்வு அளித்து டி.ஐ.ஜி.​ கண்ணப்பன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக