புதியவை :

Grab the widget  Tech Dreams

26 பிப்ரவரி 2010

2010-11 பொது பட்ஜெட் முக்கிய அம்சங்கள்.


* ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி இல்லை

*
1.60 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம் வரி

*
5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதம் வரி

*
8 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி

*
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி குறைப்பு

*
விவசாயிகள் கடனைத் திருப்ச் செலுத்த அவகாசம்

*
குறித்த காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டிக்குறைப்பு

*
மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிதி

*
திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு 200 கோடி ரூபாய்

*
பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி

*
25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு நீடிப்பு

*
கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.

*
சிறப்பு பொருளாதார மண்டலஙக்ளின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

*
வற்ட்சி காரணமாக விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் தரப்படும்

*
பயிர்க்கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் அதற்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்

*
ரயில்வேக்கு வரும் நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 752 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

*
மின்சாரத் துறைக்கு 5 ஆயிரத்து 130 கோடி ஒதுக்கப்படும்.

*
சுகாதார மற்றும் குடும்ப நலத்திற்கான திட்ட ஒதுக்கீடு 22 ஆயிரத்து 300 கோடியாக இருக்கும்

*
கிராமப்புற மேம்பாட்டிற்கு 66 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*
சாலை போக்குவரத்திற்கான ஒதுக்கீடு 19 ஆயிரத்து 894 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

*
நகர்ப்புற மேம்பாட்டிற்கு 5 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்படும்

* 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு


*
சேரி மேம்பாட்டிற்கு ஆயிரத்து 270 கோடி ஒதுக்கப்படும்



*
பாதுகாப்புத்துறைக்கு ஒரு ‌லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ஒதுக்கீடு

* எதிர்பார்க்கப்படும் வரி வருவாய்- ரூ.7,46,656 கோடி; இதர வருவாய்- 1,48,118 கோடி

* எதிர்பார்க்கப்படும் செலவு: 11.8 லட்சம் ‌கோடி

* அரசின் மொத்தக் கடன் 3 லட்சத்து 45 ஆயிரத்து 10 கோடி

* சிகரெட் மற்றும் புகையிலை மீதான வரி அதிகரிப்பு


* கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 7.5 சதவீதமாகவும் அதிகரிப்பு



* பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு



* டி.வி., குளிர்சாதான பெட்டிக்கு வரி உயர்வு


பிரணாப் முகர்ஜி தமது உரையில் கூறியதாவது: ஒட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் லட்சியம். விலைவாசி உயர்வு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது.


அதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.


பெரும்
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது.


பொது விநியாக முறை நவீனப்படுத்தப்படும் ஏற்றுமதி நிலைமை ஊக்கம் அளிப்பதாக உள்ளது.


பருவ மழை தவறியதால் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பொருள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்தது.


நேரடி வரிவிதிப்பு முறையையும் பொதுவான விற்பனை வரி முறையையும் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.


நிதி நிலையை ஸ்திரமாக்கவும் மேம்படுத்தவும் ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்படும். கைவினைப் பொருட்கள்,


தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.



குறைந்த செலவில் மின்சாரம் உற்ப்த்தி செய்யும் வகையில் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.


உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதில் தனியார் பங்களி்ப்பும் ஏற்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக