
கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக நர்சு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து 8260 ரூபாய் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 6000 ரூபாய்க்கு 100 முதல் 600 ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டது தெரியவந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சோதனை நடத்தியதில் நர்சு லட்சுமியிடம் கணக்கில் வராத 1260 ரூபாயை கைப்பற்றினர். உதவித்தொகை பெற வந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில், நர்சு லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதை தொடர்ந்து, நர்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் டாக்டர் ரவிக்குமாரிடம் 7000 ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கொடுமை, வேறு என்னத்த சொல்ல...?!
பதிலளிநீக்கு