புதியவை :

Grab the widget  Tech Dreams

01 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை தலைமை எழுத்தர் தர்மராஜுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை.

திருநெல்வேலி: லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம், ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றியவர் தர்மராஜ்.

2001ல் திசையன்விளை கீரைக்காரன் தட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒரு சொத்து தொடர்பாக வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப்பித்தார். அரசு கட்டணம் தவிர 800 ரூபாய் லஞ்சம் தருமாறு தர்மராஜ் கேட்டார். பணம் தர விரும்பாத கண்ணன், லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று லஞ்சம் வாங்கும்போது தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை சி.ஜெ.எம்.,கோர்ட் நீதிபதி பொன்பிரகாஷ், தலைமை எழுத்தர் தர்மராஜுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக