புதியவை :

Grab the widget  Tech Dreams

22 அக்டோபர் 2009

300 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை


ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டா வழங்க 300 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராஜபாளையம் தாசில்தார் அலுவலக எழுத்தருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நீதிபதி முருகாம்பாள் தீர்ப்பளித்தார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சேதுராஜ். இவருக்கு சொந்தமான திருவேங்கடபுரத்திலுள்ள காலி இடத்திற்கு பட்டா வேண்டி ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை தாசில்தார் பார்வைக்கு அனுப்புவதற்கு அலுவலக எழுத்தர் வெங்கடேசன் 300 ரூபாய் லஞ்சமாக கேட்டார். லஞ்சப்பணத்தை 2003 செப்.15ம் தேதி சேதுராஜ் கொடுக்கும் போது பிடிபட்டார். இது தொடர்பான வழக்கு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய வெங்கசேடனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக