புதியவை :

Grab the widget  Tech Dreams

12 அக்டோபர் 2009

லஞ்சம் - நாமக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ., பால்ராஜ் கைது


நாமக்கல் : நாமக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ., பால்ராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தீபாவளிக்காக சாலை ஓர கடைகளை வைக்க, சாலை வியாபாரிகள் குழு பால்ராஜை சந்தித்து பேசியது. அப்போது, கடைகள் வைப்பதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் தர பால்ராஜ் கோரியுள்ளார். பின்னர் 8 ஆயிரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வியாபாரிகள் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தனர். நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பெரிய சாமி ஆலோசனையின் படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாயை, வியாபாரிகள் பால்ராஜிடம் அளித்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பால்ராஜூடன் அவரது டிரைவர் செல்வம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ஏ.பி.ஆர்.ஓ., வாக இருந்த பால்ராஜ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பி.ஆர்.ஓ.,வாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக