புதியவை :

Grab the widget  Tech Dreams

15 அக்டோபர் 2009

லஞ்சம் கொடுக்காமல் செய்த வேலைகளுக்கு பணம் வாங்குவது எப்படி? அரசு அலுவலக வாசலில் படுத்து புரண்ட காண்டிராக்டர்.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளது. இதில், 10 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஒன்றியத்தில் சுமார் 15 ஒப்பந்தக்காரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றார்கள். அக்கரப் பாக்கம் மற்றும் ஆலப் பாக்கம் கிராமத்தில் வெங் கல் சீனிவாசன் என்ற ஒப்பந்தக்காரர் சுமார் ரூ.23 லட்சத்துக்கு பணிகள் எடுத்து செய்து வருகிறார்.
ஆமிதா நல்லூர், பெரிய பாளையம், பனப்பாக்கம், மாகரல், கொமக்கம்பேடு, பூச்சி அத்திப்பேடு ஆகிய ஊராட்சிகளிலும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை உதவி செயற் பொறியாளர் கௌசல்யா, உதவி பொறி யாளர்டார்வின் குமார், விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் தான் பணிகள் செய்ய வேண்டும். அதே போல் 3 அதிகாரிகளும் கையெழுத்து போட்டால் தான் செய்த பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்கள் பணம் பெற முடியும்.
காண்டிராக்டர் வெங்கல் சீனிவாசன் 6 பணிகள் செய்து முடித்துள்ளார். அதற்கான பணம் பெறுவ தற்கு அதிகாரிகளிடம் கையெ ழுத்து வாங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக எல்லா புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலைந்துள்ளார்.
நேற்றும் காலை முதல் மாலைவரை அலுவலகத்தில் காத்திருந்தார். சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் வர வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த காண்டிராக்டர் வெங்கல் சீனிவாசன் அலுவ லக வாசலின் குறுக்கே படுத்து உருண்டார். சுமார் ஒரு மணி நேரம் வாசலின் குறுக்கே அவர் படுத்தி கிடந்ததால் அலு வலகத் தில் இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடிய வில்லை.
இது பற்றி சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளுக்கும் செல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று அல்லது நாளை காலை அலுவலகத்துக்கு வந்து கையெழுத்து போட்டு விடுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன் பிறகு வெங்கல் சீனிவாசன் எழுந்து சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக