புதியவை :

Grab the widget  Tech Dreams

14 அக்டோபர் 2009

கடலூர் நகராட்சி கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கடலூர் நகராட்சியில் நிறைவேற்றப்படும் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் காசோலைக்கு, 2 சதவீத தொகையை லஞ்சமாக, கமிஷனர் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., வேதரத்தினம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சேகர், திருமால் மற்றும் போலீசார் நேற்று இரவு 7.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, கமிஷனர் மேஜை மீதிருந்த காசோலைகள், அதற்குரிய கணக்குகளை ஆய்வு செய்தனர். பின்னர் கமிஷனர் குமாரிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., விசாரணை செய்தார்.
தொடர்ந்து பொறியாளர் மற்றும் கணக்கு பிரிவுகளில் சோதனை நடத்தினர்.டி.எஸ்.பி., வேதரத்தினம் கூறுகையில்,"நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமிஷனரிடம் விசாரணை செய்தோம். அதில், ஒப்பந்ததாரர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க காசோலை வைத்திருந்தனர். இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை'என்றார்.இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் கூறுகையில்,"இது ஒரு வழக்கமான "இன்ஸ்பெக்ஷன் தான்' வேறு எதுவும் இல்லை' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக