புதியவை :

Grab the widget  Tech Dreams

27 அக்டோபர் 2009

லஞ்ச வழக்கில், போலீஸ் டி.எஸ்.பி சுப்பு சிங் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை : லஞ்ச வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டில்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறையில் உள்ள தமிழ்நாடு 8வது சிறப்பு காவல் படையில் உதவி கமாண்டராக (டி.எஸ்.பி.,) இருப்பவர் சுப்பு சிங். இவர் கடந்த 1991ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தார். அப்போது, இருதரப்பிற்கிடையேயான சிவில் பிரச்னை போலீசாருக்கு புகாராக வந்தது. இந்த புகாரை விசாரித்த சுப்பு சிங், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட ரூ. 400 லஞ்சமாக பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு சி.ஜே.எம்., கோர்ட், வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுப்புசிங்கிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஐகோர்ட் முடிவை எதிர்த்து, சுப்புசிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட், சுப்புசிங்கை கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் தங்கியிருந்த சுப்புசிங் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக