புதியவை :

Grab the widget  Tech Dreams

26 அக்டோபர் 2009

ரூ 200 லஞ்சம் வாங்கிய எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய எழுத்தர் கோதண்டம் கைது .





சென்னை: எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பஞ்சசீலன். இவரை மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.அங்கு, குற்றப்பிரிவு எழுத்தராக பணிபுரியும் கோதண்டம் ரூ.200 லஞ்சம் கேட்டார். இரண்டு முறை பணம் கொடுத்த பஞ்சசீலன், நேற்று வந்தபோது ‘என்னிடம் பணம் இல்லை; யாரிடமாவது வாங்கி வருகிறேன்’ என்றார்.இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். பஞ்சசீலனிடம் மை தடவிய 200 ரூபாயை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதை பெற்றுக்கொண்ட கோதண்டத்தை, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக