புதியவை :

Grab the widget  Tech Dreams

15 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய பெரும்பாலை மின் வாரிய பொறியாளர் கணேசன் .கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி கைது


தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பக்கமுள்ளது சின்னகடமடை. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது47). விவசாயி. இவருக்கு 8 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது.இவர் தனது நிலத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 29-8-2008-ல் மனு தாக்கல் செய்தார்.
அதன் பிறகு புதிய வீடு கட்டினார். அந்த வீட்டிற்கும் மின் இணைப்பு கேட்டார். இந்நிலையில் பெரும்பாலை மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர் கணேசன் (25).கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி (45) ஆகியோர் மின் இணைப்புக்கு ரூ. 30 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாச்சியப்பன். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தார். அதன்அடிப்படையில் ராஜேந்திரன் இன்று காலை 10 மணியளவில் பெரும்பாலை மின் அலுவலகத்தில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறியாளர் கணேசன் .கமர்சியல் இன்ஸ்பெக்டர் இருதயசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக