புதியவை :

Grab the widget  Tech Dreams

22 அக்டோபர் 2009

சுனாமி நிதியில் மோசடி பெண் டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு!


கடந்த 2004ல் சுனாமியால் பாதித்த மக்களுக்காக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ரூ.17 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 855 வழங்கியது. இந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பொறுப்பு தென்னிந்திய திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. நிவாரண பணி பொறுப்பு திருச்சபையின் பொது செயலாளராக இருந்த பாலின் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர், தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோருடன் சேர்ந்து ரூ.7.50 கோடி மோசடி செய்ததாக திருச்சபையின் இப்போதைய பொது செயலாளர் மோசஸ் ஜெயக்குமார், மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதனடிப்படையில் டாக்டர் பெனடிக்டா, ராபர்ட் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் பெனடிக்டா மனு தாக்கல் செய்தார். முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, பெனடிக்டாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக