புதியவை :

Grab the widget  Tech Dreams

15 அக்டோபர் 2009

மாமுல் வசூலித்த திருச்சி மாநகராட்சி ஊழியர் கைது


திருச்சியில் கறிக்கடைக்காரரிடம், தீபாவளி மாமூல் வசூலித்த மாநகராட்சி ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் அதிகளவில் இனாம் வசூலிக்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், மாநகர் முழுவதும் மாறுவேடத்தில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள, கறிக்கடைக்காரர் மணியிடம், 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பாலக்கரையை சேர்ந்த மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கமருதீனை கைது செய்து, அவரிடமிருந்த 5,000 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக