புதியவை :

Grab the widget  Tech Dreams

28 அக்டோபர் 2009

விதவையிடமும் லஞ்சமா ? என்ன கொடுமை இது ! - மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடக்கும் அநியாயம் !



மதுரை : மதுரை வடக்கு தாலுகா அலுவலக நலிந்தோர் திட்டப் பிரிவில், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான "செக்' வழங்க, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். புதூரைச் சேர்ந்தவர் சரவணம்மாள்(50). இவரது கணவர் நடராஜன் கடந்த ஜூனில் இறந்தார். விதவைக்கான அரசு வழங்கும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு நலிந்தோர் திட்டப்பிரிவில் விண்ணப்பித்தார்.

"செக்' தயாரான நிலையில், தல்லாகுளம் தலையாரி முருகேசனை சந்திக்குமாறு சரவணம்மாள் நிர்பந்திக்கப்பட்டார். "செக் வேண்டுமானால் லஞ்சமாக 2,500 ரூபாய் தரவேண்டும்' என்று முருகேசன் வற்புறுத்தினார். தர மறுத்த சரவணம்மாள், தாலுகா அலுவலக இள நிலை உதவியாளர் ரவீந்திரனை நாடினார். அவர் 3 ஆயிரம் ரூபாய் கேட்டார். இதை நலிந்ததோர் திட்ட தாசில்தார் கல்யாணசுந்தரம் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் கண்டுகொள்ளவில்லை.மாறாக, " புரோக்கர் காளியம்மாளுடன் வங்கிக்கு சென்று, "செக்கை' பணமாக மாற்றி 3 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். சரவணம்மாள் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு போனில் புகார் தெரிவித்தார். இதைதொடர்ந்து வடக்கு தாலுகாவில் நேற்று மாலை முதல் இரவு வரை டி.எஸ்.பி. குலோத் துங்க பாண்டியன் தலைமையில் விசாரணை நடந்தது. அவர் கூறுகையில், ""விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்புவோம். இதன்பின் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்யும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக