புதியவை :

Grab the widget  Tech Dreams

27 அக்டோபர் 2009

ஸ்பெக்ட்ரம் ‌‌லைசென்ஸ் : சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை


ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டில்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர்.இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக