புதியவை :

Grab the widget  Tech Dreams

12 அக்டோபர் 2009

ரூ1,000 லஞ்சம் - மின் உதவி பொறியாளர் பொறியாளர் சவரிராஜன் கைது


காளையார்கோவில்: சிவகங்கை அருகே, காளையார்கோவில் கல்லுவழியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இருதயராஜ் (45). புளியடிதம்மம் சந்தியாகு தோட்டத்தை விலைக்கு வாங்கினார்.

மின் இணைப்பை மனைவி பெயருக்கு மாற்ற, உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். உதவி பொறியாளர் சவரிராஜன் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவரிடம் 1,000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட இருதயராஜ், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்த சவரிராஜனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தார். கண்காணித்த கூடுதல் எஸ்.பி., அவரைப் பிடித்தார். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக