புதியவை :

Grab the widget  Tech Dreams

13 அக்டோபர் 2009

கம்பம் வன ஊழியர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் !


கம்பம்: மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வன ஊழியர்கள், ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என, தேனி மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

வனப்பகுதிகம்பம்களான வெண்ணியார் மேற்கு, கிழக்கு பீட்டுகளில் வன ஊழியர்கள் சிலர் தோதகத்தி மரங்களை வெட்டி கடத்தினர் என, குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சேகர் புகார் அனுப்பியிருந்தார். மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டார். போடி உதவி வனப்பாதுகாவலர் வடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வனப்பகுதிகளில் நடத்திய ஆய்வில், 21 தோதகத்தி மரங்கள் மற்றும் இதர ஜாதி மரங்கள் வனத்துறையால் வெட்டிக் கடத்தப்பட்டதை உறுதி செய்தனர்.
தனிப்படையினர் கொடுத்த அறிக்கையில், ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் பணியில் இருந்த, வன ஊழியர்கள் ஐந்து பேர் சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள், "ரெக்கவரி'யாக ஐந்து லட்ச ரூபாய் வரை செலுத்த மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக