புதியவை :

Grab the widget  Tech Dreams

20 அக்டோபர் 2009

லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநராக ஏடிஜிபி ராமானுஜம் நியமிக்கப்பட்டார்

டிஜிபி போலாநாத் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து இத் துறையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக ஐஜி மற்றும் ஏடிஜிபி நிலையிலான அதிகாரிகளே கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புதிதாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி போலாநாத் கடந்த 6-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை பதவி, இயக்குநர் பதவியாகும். ஏடிஜிபி ராமானுஜம் இயக்குநராக உள்ள நிலையில், டிஜிபி போலாநாத் நிர்வாக ரீதியாக எந்த பதவி வகிப்பார் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்தத் துறையில் இப்போது ஒரு இயக்குநர், 2 இணை இயக்குநர்கள் பதவிகள் உள்ளன.
இதையடுத்து டிஜிபி போலாநாத் இயக்குநர் பதவியையும், ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநர் பதவியையும் வகிப்பார்கள் என அரசு துறைரீதியான விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் உள்துறையிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2001-ம் ஆண்டு இறுதியில் டிஜிபி வி.கே. ராஜகோபாலன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அப்போது இயக்குநராக இருந்த ஏடிஜிபி மாத்தூர், கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் டிஜிபி போலாநாத் வருகையை அடுத்து ஏடிஜிபி ராமானுஜம் கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக