புதியவை :

Grab the widget  Tech Dreams

15 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய நாமக்கல் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சஸ்பெண்டு .

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பால்ராஜ் (வயது53), இவரது ஜீப் டிரைவர் செல்வம். இவர்கள் ஜவுளி விற்பனை கண்காட்சி அமைக்க அனுமதி பெற்றுத்தர ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு லஞ்ச வழக்கில் கைதான செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பால்ராஜ், ஜீப்டிரைவர் செல்வம் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக