புதியவை :

Grab the widget  Tech Dreams

24 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய ஆம்பூர் ஈ.எஸ்.ஐ.மருத்துவ உதவியாளர் அன்பு சஸ்பெண்ட்.


வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக, தொழிலாளர்கள் காப்பீடு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன், மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கிருந்த நோயாளிகள் அமைச்சரை முற்றுகையிட்டு, "மருந்து, மாத்திரைகள் வாங்க மருத்துவ உதவியாளர் அன்பு லஞ்சம் கேட்பதாகவும், இங்கு டாக்டர்கள் சரியாக வருவதில்லை' என்றும் புகார் செய்தனர். அன்புவிடம், அமைச்சர் அன்பரசன் நடத்திய விசாரணையில், அவர் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது. மேலும், இவருக்கு ஆதரவாக, மருத்துவமனை மெடிக்கல் ஆபீசர் விஜயா சந்திரிகா இருப்பதும் தெரிய வந்தது.மருத்துவ உதவியாளர் அன்புவை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த விஜயா சந்திரிகா மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக