புதியவை :

Grab the widget  Tech Dreams

14 அக்டோபர் 2009

ரூ.600 லஞ்சம் வாங்கிய திருப்பரங்குன்றம் நகராட்சி பில் கலெக்டர் ராஜா கைது



திருப்பரங்குன்றம், அக். 14-

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 26). வக்கீல் படிப்பு படித்து முடித்துள்ள இவர் தற்போது மின் வாரிய காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது அக்காள் லட்சுமி. அவரது கணவர் சிவானந்தம். இவர்கள் அதே பகுதியில் தற்போது வீடுகட்டி வருகிறார்கள்.

புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவது தொடர்பாக மின் வாரிய அலுவலகத்தை சிவானந்தம் தொடர்பு கொண்டார். அங்கு புதிய வீட்டிற்கான வரி செலுத்தும் ரசீதை கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். உடனே சிவானந்தம் திருப் பரங்குன்றம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வீட்டு வரி ரசீது வழங்குமாறு கடந்த மாதம் 15-ந்தேதி அவர் மனு செய்தார்.

முதலில் நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக வேலை பார்த்து வரும் ராஜா என்பவர் வீட்டு வரி ரூ.335-ம், ரசீது வழங் குவதற்காக தனக்கு ரூ.600-ம் தரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். இது பற்றி யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு சிவானந்தம் அங்கிருந்து வந்துவிட்டார்.

2 நாட்கள் கழித்து மீண்டும் ராஜாவை சந்தித்து வீட்டு வரிக்கான ரசீதை வழங்குமாறு கேட்டார். ஆனால் பில் கலெக்டர் ராஜா ரூ.600 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 3-வது முறையாகவும் சிவானந்தம் சென்று கேட்டார். லஞ்சம் தராமல் ரசீது தரப்பட மாட்டாது என்று ராஜா திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதையடுத்து சிவானந்தம் நடந்த சம்பவம் குறித்து தனது மைத்துனர் பிரபுவிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் இருவரும் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று புகார் தெரிவித் தனர். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவானந் தத்திடம் கொடுத்து அதனை ராஜாவிடம் தருமாறு நேற்று முன்தினம் கூறினர்.

ஆனால் நேற்று பில்கலெக்டர் ராஜா விடுமுறை எடுத்து சென்றுவிட்டார். இன்று காலை திட்டமிட்டபடி சிவானந்தம் வீட்டு வரி ரசீதை வழங்குவதற்காக ரூ.600 லஞ்சப்பணத்தை பில் கலெக்டர் ராஜாவிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட ராஜா தற்போது அலுவலக கம்ப்யூட்டர் பழுதாகி இருப் பதாகவும், எனவே ரசீது எண்ணை (13276) மட் டும் கூறுகிறேன். அதனைக் கொண்டு நீங்கள் புதிய மின் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பினார்.

அப்போது வெளியே தயாராக நின்ற லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு குலோத்துங்கன், இன்ஸ்பெக்டர்கள் பெரு மாள்பாண்டி, மணிமாறன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய நகராட்சி பில்கலெக்டர் ராஜாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக