புதியவை :

Grab the widget  Tech Dreams

14 அக்டோபர் 2009

3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டிராபிக் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் கைது


சென்னை : ஜூஸ் கடைக்காரரிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, டிராபிக் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை பாரிமுனையைச் சேர்ந்தவர் திருமலை.நடமாடும் ஜூஸ் கடைகள் வைத்து நடத்தி வருகிறார். நடைபாதையில் ஜூஸ் கடையை நடத்துவதற்காக இவரிடம், எழும்பூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மாதம்தோறும் 3,000 ரூபாய் லஞ்சமாக பெற்று வந்துள்ளார். ஆரோக்கியதாஸ் லஞ்சம் பெறுவது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திருமலை புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி., பவானீஸ்வரி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில் போலீசார், ஆரோக்கியதாஸ் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்தனர். ஆரோக்கியதாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக