புதியவை :

Grab the widget  Tech Dreams

02 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய பள்ளி எழுத்தர் ரங்கராஜ் கைது

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் பள்ளி எழுத்தர், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி, திருவானைக்கோவில் சன்னிதி வீதியில், திருவானைக்கோவில் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளி.


இந்த பள்ளியில் எழுத்தராக பணிபுரிபவர் ரங்கராஜ். இதே பள்ளியில் பணிபுரியும் மாரியப்பன் என்ற ஆசிரியர் தனக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரங்கராஜால் அலைக்கழிக்கப்பட்டார். நிலுவைத் தொகை பெற வேண்டும் என்றால், தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரங்கராஜ் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் மாரியப்பன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் செய்தார். எழுத்தர் ரங்கராஜிடம் நேற்று காலை ஆசிரியர் மாரியப்பன், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், 2,000 ரூபாய் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், ரங்கராஜை கையும், களவுமாக கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக